Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஜெயம் ரவி எடுத்த அதிர்ச்சி முடிவு..! உண்மைய உடைத்த பிரபல நடிகர்..! விவாகரத்துக்கு இது தான் காரணமா..?

தற்போது திரை உலகில் அடுக்கடுக்காக நிகழ்ந்து வரக்கூடிய விவாகரத்துக்கள் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அந்த வகையில் இணையங்களில் அதிக அளவு பரவி வரும் ஜெயம் ரவி, ஆர்த்தி விவகாரம் தற்போது பரவலாக மக்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் பரவ கூடிய சமயத்தில் ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்துக்கு இது தான் காரணம் என்ற உண்மையை உடைத்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சானது இணையங்களில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

ஜெயம் ரவி எடுத்த அதிர்ச்சி முடிவு..

ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டிருக்கும் ஆர்த்தி ஜெயம் ரவியின் வீட்டாரை விட அந்தஸ்திலும் பொருளாதாரத்திலும் பல மடங்கு உச்சத்தில் இருப்பவர்கள். எனினும் இருவரும் விரும்பியதால் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது.

---- Advertisement ----

இதனை அடுத்து சிறப்பாக சென்று கொண்டு இருந்த இவர்களது மண வாழ்க்கையில் தற்போது விரிசல்கள் ஏற்பட்டு விரைவில் பிரிய இருப்பதற்கான அறிகுறிகள் வெட்ட வெளிச்சம் ஆனதை அடுத்து பலரும் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்த சமயத்தில் அவர்கள் இரு மகன்களும் என் ஆவார்கள் என்ற கேள்விக்குறி எழுந்ததைப் போலவே தற்போது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி பிரிவில் பாதிக்கப்படுவது இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகள்தான்.

அது எப்படி இவ்வளவு உறுதியாக விவாகரத்து நடக்கும் என்று கூறுகிறார்கள் என பலரும் பல்வேறு வகைகளில் சிந்தித்து வருகிறார்கள்.

ஏற்கனவே எப்படி ஐஸ்வர்யா விவாகரத்து பெறுவதற்கு முன்பு instagram பக்கத்தில் இருந்து தனுஷ் சம்பந்தமான அனைத்தையும் நீக்கினாரோ, அது போலவே ஜெயம் ரவியின் மனைவியாக ஆர்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த ஜெயம் ரவியின் புகைப்படங்களை முற்றிலும் நீக்கி இருக்கிறார்.

உண்மையை உடைத்த பிரபல நடிகர்..

அது மட்டுமல்லாமல் ஏற்கனவே விவாகரத்து பற்றிய பேச்சுக்கள் விழுந்த போது காதல் என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை என்று தெளிவாக சொல்லி விவாகரத்து பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரண்டு நாட்களிலேயே இன்ஸ்டா பக்கத்தில் இருந்த புகைப்படங்களை நீக்கி அதிர்ச்சியை தந்திருக்கிறார்.

மேலும் தனுசுக்கும் ஆர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக சொல்லி வருவதை அடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த பிரச்சனையில் தனுசுக்கும் ஜெயம் ரவிக்கும் கருத்து வேற்றுமையும் சண்டையும் ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும்.

விவாகரத்துக்கு இது தான் காரணமா..

இதனை அடுத்து ஜெயம் ரவியின் படங்கள் தொடர்ந்து பிலாப்பானதை அடுத்து ஜெயம் ரவியின் மாமியார் தனது சொந்த வீட்டு மாப்பிள்ளை கை கொடுத்து தூக்கி விட சைரன் போன்ற படங்களை எடுத்திருந்தார்.

எனினும் அவர்கள் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை எனினும் இயக்குனர் பாண்டியராஜை வைத்து மற்றொரு படத்தை தயாரிக்க திட்டமிட்டதை அடுத்து ஜெயம் ரவி 20 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டதை அடுத்து இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடக்க இயக்குனர் கோபித்துக் கொண்டு அந்த கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி ஓகே செய்துவிட்டார்.

இந்த பிரச்சனையும் ஒரு பக்கம் சூடு பிடித்ததை அடுத்து அவர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பு சற்று அதிகமாகி விவாகரத்துக்கு வித்துட்டு இருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை பிரபல நடிகர் வெளியிட்டு இருப்பது இணையங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top