Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

குடிபோதையில் அஜித் விஜய் மீது பொறாமையோடு சொன்ன வார்த்தை.. கிடுகிடுக்க வைத்த பாடகி சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக இருக்கும் இரண்டு பேர்குள்ளும் எப்போதுமே போட்டிகள் பொறாமைகள் நிலவுவது வழக்கமாக பார்க்கப்பட்ட வருகிறது.

ஆனால் அவர்கள் உண்மையிலேயே அப்படி நடந்து கொள்கிறார்களா என்றால் கேள்விக்குறியாக தான் நாம் இதுவரை பேசி வந்திருந்தோம்.

அதாவது சிவாஜி கணேசன் எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி அதன் பிறகு கமல்ஹாசன் ரஜினிகாந்த் பின்னர் அஜித் விஜய் என இப்படி இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்கள் அடித்துக்கொள்கிறார்கள்.

நட்சத்திரங்களுக்கும் போட்டி:

அது மட்டுமில்லாமல் தங்களுடைய ஹீரோ தான் பெரியவர் தங்கள் ஹீரோதான் மிகச்சிறந்த நடிகர் என போட்டியும் பொறாமைகளும் நிலவுவதுண்டு.

அஜித்தின் படங்கள் வெளியாகும் போது விஜய் ரசிகர்கள் அதை அடித்து நொறுக்கும் வகையில் தளபதியை தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என களத்தில் இறங்குவார்கள். அதே நாளில் விஜய் படமும் வெளியாகும்.

அப்படித்தான் ஒரே சமயத்தில் அஜித் மற்றும் விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகி போட்டி போட்டுக் கொண்டு வசூல் சாதனை புரியும்.

அஜித் – விஜய் உண்மையில் எதிரிகள்:

ஆனால் நிஜத்தில் அவர்கள் நண்பர்களாக தான் இருக்கிறார்கள். ரசிகர்கள்தான் இப்படி போட்டி போட்டுக் கொள்கிறார்கள் என செய்திகள் வெளியாகும்.

அதைத்தான் நாம் காலம் காலமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை.

அவர்களுக்குள்ளும் உண்மையாகவே போட்டிகள் பொறாமைகள் இருக்கிறது என்ற உண்மையை உரக்க கூறியிருக்கிறார் பாடகி சுசித்ரா.

ஆம் சமீப நாட்களாக பாடகி சுசித்ராவின் பேட்டிகள் சமூக வலைதளங்கள் எங்கும் தீயாய் பரவி வைரலாக பேசப்பட்டு வருகிறது.

திரைப்பட பாடகியாக இருந்து டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் திரைப்பட நடிகை, ஆர் ஜே இப்படி பன்முக திறமை கொண்ட பாடகி சுசித்ரா கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கி மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அதை எடுத்து இந்த பிரச்சனைகள் ஆழ்ந்த ஓழ்ந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிக மோசமான அனுபவங்களை குறித்து கூறி வருகிறார்.

அத்துடன் தன் வாழ்க்கையை நாசம் செய்தவர்கள் பற்றியும் திரைப்படத்துறையில் இருக்கும் பிரபலங்களின் உண்மை முகத்தையும் கிழித்து வருகிறார்.

பரபரப்பை கிளப்பும் பாடகி சுசித்ரா:

அந்த வகையில் தற்போது அஜித்தை குறித்து சுசித்ரா மோசமாகி கூறி இருக்கும் விவகாரம் மிகவும் பரபரப்பாக கோலிவுட் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது.

அஜித்தும் சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கிவிட்டாரா? என்ற அளவுக்கு விழிப்புதுங்க வைத்துள்ளது.

அவர் கூறியதாவது, ஒருமுறை தயாநிதி அழகிரி அவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்காக நாங்கள் அழைக்கப்பட்டு இருந்தோம்.

அங்கே அதிகாலை 5 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. குறிப்பாக நாங்கள் பாடகிகள் அனைவரும் அந்தாக்ஷரி விளையாடிக் கொண்டிருந்தோம்.

குடித்துவிட்டு அஜித் என்னிடம்:

சத்தியமாக இது தான் நடந்தது. அப்பொழுது நடிகர் அஜித்தும் அங்கே இருந்தார். அவரும் நிறைய மது அருந்தி இருந்தார்.நிறைய அழுதார்.. நிறைய பாடல் பாடினார்.

அப்போது என்னிடம் வந்து சின்னத்தாமரை பாடலுக்கு நான் அடிமை. அந்த பாடலை நீங்கள் விஜய்க்காக பாடி விட்டீர்கள் எனக்கு பொறாமையாக இருக்கிறது. என்று என்னிடம் பொறாமையாக பேசினார்.

அதற்கு என்ன இன்னொரு பாடல் உங்களுக்காக பாடிவிட்டால் போகிறது என நான் கூறினேன் என பேசி இருக்கிறார் நடிகை பாடகி சுசித்ரா.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version