ஜோதிகா பேக்கை பார்த்து ரசிகர்கள் ஷாக்..! கோயிலுக்கு காசு குடுக்க வேணாம் என்ற மகராசியின் லட்சணம்..!

ஜோதிகா சாதனா என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ஜோதிகா தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழி படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இந்நிலையில் வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்ததை அடுத்து காக்க காக்க படத்தில் நடிக்கும் போது சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஜோதிகா பேக்கை பார்த்து ஷாக்கில் ரசிகாஸ்..

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் கட்டுக்கோப்பாக இருந்து வந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் கொடுத்ததை அடுத்து இவர்கள் வீட்டில் புகைச்சல் ஏற்பட்டது.

இந்த புகைச்சலுக்கு காரணமே ஜோதிகாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் சிவகுமார் சில கட்டுப்பாட்டுகளை விதித்ததை அடுத்து தன் கணவன் வீட்டில் இருந்து தன் கணவரையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தொழில் நிமித்தமாக மும்பையில் செட்டிலாகி உள்ளது போல ஜோடித்திருக்கிறார்.


இதனை அடுத்து ஜோதிகா ஒவ்வொரு பேட்டியிலும் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வகையில் இவரது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்து பேசி வருவதை அடுத்து அந்த பேச்சு வைரலாக மாறி இவர் பற்றிய கலவை ரீதியான விமர்சனங்கள் வருவது வழக்கமாகிவிட்டது.

கோயிலுக்கு காசு கொடுக்க வேண்டாம்..

அந்த வகையில் தற்போது கோயிலுக்கு காசு கொடுக்க வேண்டாம் என்று சொன்ன மகராசியின் லட்சணம் எப்படி இருக்கிறது என்பதை அவர் கையில் வைத்திருக்கும் பேக்கை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.

எனவே அது பற்றிய விரிவான விளக்கமான விஷயத்தை இந்த பதிவில் நீங்கள் படித்து ஜோதிகாவின் இலக்கணம் எப்படி உள்ளது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் நடிகை ஜோதிகா நிகழ்ச்சி ஒன்றில் கோயிலுக்கு செலவு பண்றதை விட ஹாஸ்பிடல் பள்ளிக்கூடங்களுக்கு செலவு பண்ணலாம் என பேசிவிட்டு சென்றார்.


மேலும் அதற்கு எடுத்துக்காட்டாக தஞ்சை பெரிய கோயிலை சுட்டிக்காட்டினார் ஜோதிகா. தமிழர்களின் அடையாளமாக ஒட்டு மொத்த இந்தியாவின் அடையாளமாக இருக்கக் கூடிய ஒரு கோயிலை அடையாளம் காட்டி நடிகை ஜோதிகா பேசிய இந்த பேச்சு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளை சம்பாதித்தது, கடுமையாக விமர்சிக்கப்பட்டார் நடிகை ஜோதிகா.

ஆனாலும் கூட இன்னும் சிலர் ஜோதிகா சொல்வதில் என்ன தவறு இருக்கிறது..? அவர் நாட்டு நடப்பை தானே கூறுகிறார். கோயிலுக்கு செலவு செய்வதை மருத்துவமனை பள்ளிக்கூடங்களுக்கு செலவு செய்யலாம் என்பதை சரிதானே என்று கூறினார்கள்.

ஆனால், ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த பலரும் மருத்துவமனை, பள்ளிக்கூடம் ஆகியவற்றை பராமரிக்க அரசுக்கு மக்கள் வரி செலுத்துகிறார்கள் என்பதை மறந்து விட்டார்கள்.

சொன்ன மகராசியின் லட்சணம்..

அத்துடன் இப்படியே இந்த விவகாரம் அடங்கி போனது. அதன் பிறகு ஒரு மருத்துவமனை ஒன்றை சரி செய்ய சில லட்சங்களை வாரி கொடுத்தார் நடிகை ஜோதிகா.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை ஜோதிகா ஹேண்ட் பேக் ஒன்றை மாட்டி வந்திருந்தார்.


அந்த ஹேண்ட் பேக்கின் விலை தான் தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஹேண்ட் பேக்கின் விலை இந்திய மதிப்பில் 1,13,000 ரூபாயாம் தள்ளுபடி போக 89,490 ரூபாய்க்கு அந்த கையடக்க ஹேண்ட் பேக் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் எங்களுடைய மாத வருமானமே 20,000 ரூபாயை தாண்டுவதில்லை. இந்த குட்டியான ஹேண்ட் பேக்கை வாங்குவது என்றால் நாங்கள் ஐந்து மாதம் சம்பாதிக்க வேண்டும்.

மேலும் உழைக்க வேண்டும். ஆனால், இந்த பேக்கை வாங்கி மாட்டிக் கொண்டு தான் எங்களை கோயிலுக்கு காசு கொடுக்க வேண்டாம் என்று சொன்னியா மகராசி..? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பின்னழகில் என்னை அடிச்சுக்க முடியுமா..? கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..! ஏக்கத்துடன் பார்க்கும் இளசுகள்..!

---- Advertisement ----