இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் தோன்றி ஒட்டுமொத்த திரையரங்கையே அதிர வைத்தவர் நடிகர் சூர்யா.
நடிகர் கமல்ஹாசனுக்குகாக வேண்டி அவரது திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால், அவருடைய கதாபாத்திரம் தான் ஒட்டுமொத்த படத்தின் கதைக்கு காரணம் என்பது படம் வெளியான பிறகுதான் தெரியவந்தது.
முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா தனக்காக சில நிமிடங்கள் மட்டும் தோன்றும் காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் எனவே அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கூறியுள்ளதாக தெரிகின்றது.
மேலும், விக்ரம் மூன்றாம் பாகத்தையும் உங்கள் பாணியிலேயே எடுங்கள் எந்த வகையிலும் என்னுடைய தலையீடு இருக்காது என்று லோகேஷ் கனகராஜிற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் கமல்ஹாசன் என்று விவரம் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனை லோகேஷ் கநகராஜ் கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தார் கதையிலே, கதையை படமாக்கிய விதத்திலோ கமல்ஹாசன் எந்த வகையிலும் இடையூறு செய்யவில்லை என் போக்கிலேயே என்று விட்டுவிட்டார் விக்ரம் திரைப்படம் 100% என்னுடைய திரைப்படம் தான் என்று கூறியிருந்தார்.
சமூக பணியில் ஜோதிகா
இது ஒரு பக்கமிருக்க நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் சமூகம் சார்ந்த விஷயங்கள் எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களை சுற்றி எப்போதும் ஒரு பரபரப்பு ஒரு சிக்கல் ஒரு சர்ச்சை இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
முன்னதாக திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று நடிகை ஜோதிகாவிடம் அவரது குடும்பத்தினர் கண்டிப்பாக கூறினார்கள். அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு தான் நடிகை ஜோதிகாவை சூர்யாவிற்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு குழந்தை குட்டி என சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா சமீபகாலமாக மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக காற்றின் மொழி என்ற திரைப்படத்தில் நடிகர் விதார்த் உடன் நெருக்கமான சில காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை ஜோதிகா.
திருமணத்திற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..?
திருமணத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகள் ஆன பிறகும் இப்படி ரொமான்ஸ் காட்சிகளில்.. கவர்ச்சியாக நடிக்கிறாரே என்று வாயைப் பிளந்தனர் ஜோதிகாவின் ரசிகர்கள்.
தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்கிறேன் என்று சில படங்களில் நடித்தார் ஜோதிகா. ஆனால், தொடர்ந்து அப்படியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை என்றே தெரிகிறது.
எனவே கதாநாயகியாக படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு நடிகை ஜோதிகா வந்துள்ளார். இது அவருடைய குடும்பத்தினரை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிப்புக்கு முழுக்கு..
இந்நிலையில் நடிகை ஜோதிகா முற்றிலுமாக நடிப்பிலிருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சினிமாவில் நடிப்பது தன்னுடைய குடும்பத்தினருக்கு பிடிக்காமல் இருப்பது தன்னுடைய வாழ்க்கையை பாதித்து விடுமோ என்ற ஒரு அக்கறையில் நடிகை ஜோதிகா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜோதிகாவின் அக்காவான நடிகை நக்மா அரசியல்வாதியாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கும் நடிகை நக்மா அரசியலில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பதாக தெரிகிறது.
அரசியலில் ஜோதிகா..
மேலும் நடிகை ஜோதிகா படங்களில் நடிப்பது தாண்டி பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் சூர்யாவும் சமூகம் சார்ந்த விஷயம் கொடுப்பதற்கு குரல் கொடுப்பதும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதால் நடிகை ஜோதிகா அரசியல் பக்கம் தலை சாய்க்க உள்ளார் என்ற விஷயமும் விவரம் வந்தவர்களிடம் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகை ஜோதிகா குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு வேண்டாமென்று சினிமாவில் நடிக்க மறுக்கிறாரா..? அல்லது அரசியலில் நுழைவதால் சினிமா வேண்டாம்..? என்று முடிவு செய்துள்ளாரா..? என்ற தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை.