Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

மொத்தமாக ஏமாந்து போன நடிகை ஜோதிகா..! அட கொடுமை காலத்த..!

தமிழ் சினிமாவில் விஜய் சூர்யா போன்ற நடிகர்கள் வளர்ந்து வந்த காலகட்டங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜோதிகா.

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விட்டார். வழக்கமாகவே நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பிறகு அதிகமாக நடிப்பது கிடையாது. அந்த வகையில் ஜோதிகாவும் நடிக்காமல் இருந்தார். பிறகு சூர்யா தயாரிக்கும் அல்லது சூர்யா நடிக்கும் திரைப்படங்களில் மட்டும் ஜோதிகாவை பார்க்க முடியும் என்கிற நிலை இருந்து வந்தது.

பிறகு நல்ல கதை இருக்கும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் ஜோதிகா. அந்த திரைப்படங்களில் கூட அவருக்கு பெரிதாக நெருக்கமான காட்சிகளோ கவர்ச்சி காட்சிகளோ இல்லாமல் ஜோதிகா பார்த்துக் கொண்டார்.

சினிமா விட்டு விலகிய ஜோதிகா:

இந்த நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா மும்பையில் ஒரு வீடு வாங்கினார். அவர் சூர்யாவை அவரது குடும்பத்திடம் இருந்து பிரித்து மும்பைக்கு கூட்டிச் செல்லதான் இப்படி ஒரு திட்டம் தீட்டுகிறார் என்று அப்பொழுது பேச்சுக்கள் இருந்தன.

---- Advertisement ----

ஏனெனில் ஜோதிகாவின் பூர்வீகம் மும்பையாகும். ஜோதிகாவின் தாய் தந்தை இருவரும் மும்பையில்தான் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வீடு குறித்து ஜோதிகா கூறும்பொழுது கொரோனா காலகட்டத்தில் தனது தாய் தந்தையரை சந்திப்பதே கடினம் ஆகிவிட்டது.

மேலும் தனது குழந்தையின் எதிர்காலத்திற்காகதான் மும்பையில் வீடு கட்டி இருக்கிறோம் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து விடுவோம் என்றெல்லாம் அவர் கூறியிருந்தாலும்  ஜோதிகா வேண்டும் என்றே இதை செய்துவிட்டார் என்று கூறி வந்தனர் ரசிகர்கள்.

பாலிவுட்டில் வாய்ப்பு:

இந்த நிலையில் ஜோதிகா பாலிவுட்டில் வாய்ப்பு தேடி வருவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. மொத்தமாக கோலிவுட்டை விட்டுவிட்டு பாலிவுட்டில் சென்று செட்டிலாக அவர் பிளான் செய்திருப்பதாகவும் பேச்சுக்கள் இருந்து வந்தன.

அதற்கு தகுந்தார் போல அஜய் தேவகன் கதாநாயகனாக நடித்த சைத்தான் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை ஜோதிகா. அதனை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகளும் வர துவங்கியிருந்தன. ஆனால் இவர் போட்ட பிளான் எல்லாமே பாழாகிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜோதிகா பேசும் பொழுது பல வருடங்களாக கோலிவுட் சினிமாவில் நடித்து இருக்கிறேன் அதனை தொடர்ந்து தான் தற்சமயம் பாலிவுட்டிற்கு சென்றேன். ஆனால் எனக்கு தகுந்த மாதிரியான வாய்ப்புகள் பாலிவுட்டில் வரவில்லை என்று கூறி இருக்கிறார் ஜோதிகா. பெரிதாக எதிர்பார்த்து சென்றுமே கூட ஜோதிகாவிற்கு பாலிவுட்டில் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கடைசியில் கிடைக்காமல் போய் உள்ளது.

Continue Reading

More in Actress

Trending

To Top