கிராம புறத்தில் பிள்ளை வளத்தியோ, பீர்க்கங்காய் வளத்தியோ என்று சொல்லக்கூடிய பழமொழிக்கு ஏற்ப நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய மகன் நீல் பிறந்து ஒன்பது மாதங்கள் கடந்த நிலையை தற்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை குஷி ஆக்கியதோடு தன் குழந்தைக்கு ஒன்பது மாதம் ஒன்பது மாதம் ஆனதை கொண்டாடி இருக்கிறார்.
நாளைய சூப்பர் ஸ்டாராக நீல் இருப்பதற்கு ஏற்ற இவரது முக லட்சணங்கள் தற்போது அந்த போட்டோவில் வெளியிட்டு அனைவரது அன்பு முத்தங்களையும் பெற்றிருக்கிறது.
காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடித்த இவர் தமிழில் ஒரு சில படங்கள் நடித்து இருந்த போதும் அந்த படங்கள் இவருக்கு வெற்றியை தரவில்லை.
அடுத்த அக்கட தேசம் பக்கம் போன இவருக்கு இங்கு சில படங்கள் கை கொடுத்த போதும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு ஹிட் படமும் இவருக்கு அமையவில்லை.
தமிழைப் பொறுத்தவரை இவர் செலக்டிவ் ஆன கேரக்டர்களை தேர்வு செய்து குறிப்பாக முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.
அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி, ஜில்லா, விவேகம் ,மாற்றான், மாரி போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்ததோடு அவர்களை தன் அழகில் கட்டி போட்டு இருக்க கூடிய ஆற்றல் இவருக்கு நிறைய இருந்தது.
சினிமாவில் ஜொலிக்கும் போதே இவர் தனது நீண்ட நாள் காதலரான கௌதம் கிச்சலு என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
குழந்தை பிறந்தவுடன் நடிப்பில் இருந்து விலகி இருந்த இவ தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தில் கமலஹாசனோடு இணைந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தனது குழந்தைக்கு 9 மாதங்கள் கடந்து விட்டதை உணர்த்தக் கூடிய வகையில் போட்டோவை போட்டு எல்லோரையும் மெர்சல் ஆக்கிவிட்டிருப்பதோடு தன் மகனுக்கு அன்பான வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தர வேண்டும் என சமூக வலைத்தளத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து இந்த போட்டோ அனைத்தும் வைரலாக பரவி வருகிறது.