நடிகை காஜல் அகர்வால் ஒரு குழந்தை பிறந்த பிறகும்கூட சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். பொதுவாக நடிகைகள் திருமணம் ஆகி விட்டாலே சினிமாவிலிருந்து ஒதுங்கி விடுவார்கள்.
ஆனால் நடிகை காஜல் அகர்வால் குழந்தை பிறந்த பின்பும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். முன்னதாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த பிரம்மாண்ட படமான இந்தியன் 2 திரைப்படம் சில எதிர்பாராத நிகழ்வுகள் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
எப்பொழுது இந்த படம் மீண்டும் துவங்கும் என்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் படம் பாதியிலேயே நின்றது. இதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் விக்ரம் என்ற ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி விட்டார்.
இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த காஜல் அகர்வால் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.
ஒரு பேட்டியில் பேசிய அவர், இந்த சம்பவத்தை பார்த்த பிறகு நான் மூன்று நாள் உறங்கவில்லை.. மூன்று நாள் சாப்பிடவில்லை.. நான் மிகவும் மனம் நொந்துபோய் இருக்கினறேன் என்று கூறியிருந்தார் நடிகை காஜல் அகர்வால். மேலும் அந்த பேட்டியின்போது கண்ணீர் சிந்தவும் செய்தார். இது ரசிகர்களை கலங்க வைத்தது.
தொடர்ந்து தன்னுடைய திருமணத்தை செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் தற்போது மீண்டும் துவங்கியிருக்கிறது.
எனவே நடிகை காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக உள்ளது. எனவே அதற்காக உடல் எடையை குறைத்து மட்டுமல்லாமல் களரி பயிற்சியும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அழகு கொஞ்சும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் இப்படியா..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.