மீன் வலையை ஆடையாக்கி, தோளில் சுமந்து கடல் கன்னி கஜோல்…

தமிழில், 2 படங்களில் மட்டுமே நடித்தவர் நடிகை கஜோல்( Kajol)பாலிவுட்டைச் சேர்ந்தவர். கடந்த 1998ல் தமிழில் மின்சார கனவு படத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஒரு வித்யாசமான காதல் கதை இது. இந்த படத்தில் இடம்பெற்ற தங்கத்தாமரை மகளே பாடல், தமிழ் சினிமா பாடல்களில் இன்றும் டாப் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பாடல் பாடியதற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிறந்த பாடகர் தேசிய விருது பெற்றார்.

இதையடுத்து, தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், கஜோல் மிகப்பெரிய தொழிலதிபராக, நடித்திருந்தார். அந்த படத்திலும், இவரது நடிப்பு பாராட்டை பெற்றது. ஆனால், தனுஷூடன் மோதும் காட்சிகளில், அக்கா – தம்பி சண்டை போல் இருந்ததாக, ரசிகர்கள் கிண்டலடித்தனர்.மராத்திய மொழி பேசும் கஜோல், பிரபல இந்தி நடிகை. இந்தி நட்சத்திர நடிகர் அஜய் தேவ்கன் தான் இவரது கணவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனிஷா என்ற தங்கை இருக்கிறார்.

Kajol
மீன் வலையை ஆடையாக்கி, தோளில் சுமந்து கடல் கன்னி கஜோல்…

மும்பையில் வசித்து வரும் கஜோல், பல இந்தி படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றிருக்கிறார். தில்வாலே துல்கானியா லே ஜயாங்கே, கபி குஷி கபி ஜாம், பனா ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகை விருது, கஜோலுக்கு கிடைத்திருக்கிறது.
கஜோல், சிறந்த கடவுள் பக்தி கொண்டவர். மிகவும் கண்டிப்பான தாயாக, தனது குழந்தைகளிடம் நடந்து கொள்வார். ஆனால், அவரது கணவர் அஜய் தேவ்கன், குழந்தைகளுக்கு மிக அதிகமாக செல்லம் கொடுப்பது வழக்கம். அதனால் கஜோலை விட, அவரது கணவர் அஜய் தேவ்கனை, பிள்ளைகளுக்கு அதிகமாக பிடிக்குமாம். இதை அவரே சில நேர்காணல்களில் போது வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

Kajol
மீன் வலையை ஆடையாக்கி, தோளில் சுமந்து கடல் கன்னி கஜோல்…

லண்டன் நைட் பிரிட்ஜில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் மினியேச்சர் உருவம் வைக்கப்பட்டுள்ளது. அதில் கஜோல் மினியேச்சர் உருவமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.கஜோலுக்கு மிகவும் பிடித்த நிறம் வெண்மை. அதனால், படங்களிலும் சரி, பொது இடங்களுக்கு வந்தாலும் அவர் அணிந்திருப்பது பெரும்பாலும் வெண்மை நிற ஆடைகள்தான்.

Kajol
மீன் வலையை ஆடையாக்கி, தோளில் சுமந்து கடல் கன்னி கஜோல்…

இன்னொரு முக்கிய விஷயம், கஜோலுக்கு கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். அவ்வப்போது மனதில் தோன்றுவதை எல்லாம், கவிதையாகி எழுதி தள்ளி விடுவது இவரது வழக்கம்.
கடந்த 1974ல் பிறந்த கஜோல், தற்போது 50வது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது மகளுடன் விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது, மகளை விட அம்மா கஜோல் அணிந்திருந்த கவர்ச்சியான ஆடையை பார்த்து, பார்வையாளர்களே அசந்து போய் விட்டனர்.

Kajol
மீன் வலையை ஆடையாக்கி, தோளில் சுமந்து கடல் கன்னி கஜோல்…

அதே போல் இப்போதும் ஒரு விழாவில், அம்மணி பங்கேற்று இருக்கிறார். கையில், கொசுவலை போன்ற துணியை தொங்கவிட்டபடி உடலின் முக்கிய பாகங்கள் தூக்கலாக தெரிய, ரசிகர்களை தெறிக்கும் விடும்படியான கவர்ச்சியில் கஜோல் தரிசனம் தந்திருக்கிறார். இளம் வயதில் கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டாத, வயது 50 ஐ நெருங்குகிற காலகட்டத்தில் கவர்ச்சியில் இளசுகளையே மிஞ்சுகிற அளவுக்கு, எல்லை மீறிய கிளாமரில் கொடி கட்டி பறக்கிறார்.

Kajol
மீன் வலையை ஆடையாக்கி, தோளில் சுமந்து கடல் கன்னி கஜோல்…

இதனால், கஜோல் கிளாமர் படங்களை பார்ப்பதற்கு என்றே தனியாக ரசிகர் பட்டாளம் காத்திருக்கிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.