Kajol

ச்சைக்..! – இணையத்தில் மட்டமான வேலை பார்த்த கஜோல்..! – செலிபிரிட்டி பண்ற வேலையா இது..?

பிரபல நடிகை கஜோல் ( Kajol ) இணையத்தில் செய்துள்ள மட்டமான வேலை அவரது ரசிகர்களையே ச்சை.. ஒரு செலிபிரிட்டி பண்ற வேலையா இது..? என்று காரி துப்ப வைத்துள்ளது.

தமிழில், இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் பாலிவுட் நடிகை கஜோல் ( Kajol Devgan ), கடந்த 1998ல் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்திருந்தார். ஒரு வித்யாசமான காதல் கதை இது. இந்த படத்தில் இடம்பெற்ற தங்கத்தாமரை மகளே பாடல், தமிழ் சினிமா பாடல்களில் இன்றும் டாப் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பாடல் பாடியதற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிறந்த பாடகர் தேசிய விருது பெற்றார்.

Kajol

இதையடுத்து, தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், கஜோல் மிகப்பெரிய தொழிலதிபராக, நடித்திருந்தார். அந்த படத்திலும், இவரது நடிப்பு பாராட்டை பெற்றது. ஆனால், தனுஷூடன் மோதும் காட்சிகளில், அக்கா – தம்பி சண்டை போல் இருந்ததாக, ரசிகர்கள் கிண்டலடித்தனர்.

மராத்திய மொழி பேசும் கஜோல், பிரபல இந்தி நடிகை. இந்தி நட்சத்திர நடிகர் அஜய் தேவ்கன் தான் இவரது கணவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனிஷா என்ற தங்கை இருக்கிறார்.

மும்பையில் வசித்து வரும் கஜோல், பல இந்தி படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றிருக்கிறார். தில்வாலே துல்கானியா லே ஜயாங்கே, கபி குஷி கபி ஜாம், பனா ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகை விருது, கஜோலுக்கு கிடைத்திருக்கிறது.

Kajol

கஜோல், சிறந்த கடவுள் பக்தி கொண்டவர். மிகவும் கண்டிப்பான தாயாக, தனது குழந்தைகளிடம் நடந்து கொள்வார். ஆனால், அவரது கணவர் அஜய் தேவ்கன், குழந்தைகளுக்கு மிக அதிகமாக செல்லம் கொடுப்பது வழக்கம்.

கஜோலுக்கு மிகவும் பிடித்த நிறம் வெண்மை. அதனால், படங்களிலும் சரி, பொது இடங்களுக்கு வந்தாலும் அவர் அணிந்திருப்பது பெரும்பாலும் வெண்மை நிற ஆடைகள்தான்.

இன்னொரு முக்கிய விஷயம், கஜோலுக்கு கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். அவ்வப்போது மனதில் தோன்றுவதை எல்லாம், கவிதையாகி எழுதி தள்ளி விடுவது இவரது வழக்கம்.

சமீபத்தில், கஜோல் மற்றும் அவரது கணவர் அஜய் தேவ்கான் இடையே எதோ ஒரு முட்டல் மோதல் நடந்து வருகின்றது என்று கிசுகிசுக்கள் பரவின. இந்நிலையில், வாழ்கையின் சோதனையான சூழ்நிலையில் சிக்கி இருக்கிறேன். அதனால் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்க விரும்புகிறேன் என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் நடிகை கஜோல்.

Kajol

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், கஜோலுக்கு என்ன ஆனது..? ஏது ஆனதுன்னே தெரியலியே.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய வெப் சீரிஸின் பெயர் சோதனை ( The Trial ) என்பதும், அதனை விளம்பரப்படுத்தவே நடிகை கஜோல் இப்படி ஒரு பதிவை எழுதியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

Kajol

இதனால் கடுப்பான ரசிகர்கள், இது மட்டமான செயல்.. ஒரு செலிப்பிரிட்டி பண்ற வேலையா இது..? என்று விளாசி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version