சோழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கும் இது பொற்காலம் தான் – இசை வெளியீட்டு விழாவில் கமல் உற்சாகம்

பொன்னியின் செல்வன் பாகம் 2, இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். விழாவில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதே போல், இந்த படத்தின் முதல் பாகம், இசை வெளியீட்டு விழாவிலும், கமல் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்தும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் டிரெய்லரை, கமல்ஹாசன் வெளியிட்டார்.

விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், சோழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கும் இது பொற்காலம்தான், என்றார்.
எழுத்தாளர் கல்கியை பார்த்து எழுத்தாளர்கள் பலர் பொறாமைப்பட்டது போல, மணிரத்னத்தை பார்த்து, இயக்குநர்கள் பலர் பொறாமைப்படுகின்றனர். அதில் ஒருவனாக நானும் பொறாமைப்படுகிறேன்.

இந்த படத்தை எடுக்கும் துணிச்சல் மணிரத்னத்துக்கும், படத்தை தயாரிக்கும் துணிச்சல் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும் இருந்தது. அதனால்தான், அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக இந்த படத்தை எடுக்க முடிந்திருக்கிறது.

இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு, எனக்கு நழுவி போய் விட்டது. ஆனால், இந்த படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடித்திருக்கின்றனர். அதனால், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். சோழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கும் இது பொற்காலம்தான், என்று கூறி இருக்கிறார் கமல்ஹாசன்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version