நான் ஸ்ரீவித்யாவை காதலிச்சது உண்மை தான்..! கண் கலங்கி பேசிய கமல்..! இதனால் தான் கல்யாணம் நடக்கல..!

நான் ஸ்ரீவித்யாவை காதலிச்சது உண்மை தான்..! கண் கலங்கி பேசிய கமல்..! இதனால் தான் கல்யாணம் நடக்கல..!

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் நடித்த நடிகை ஸ்ரீவித்யா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கும். இவர் சுமார் 800 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் உலகநாயகன் கமலஹாசனோடு இணைந்து உணர்ச்சிகள், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் நடித்ததின் மூலம் இவர்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி அது காதலில் முடிந்தது.

எனினும் அவர்கள் காதல் நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை குறித்து கமலஹாசன் காபி வித் டிடி நிகழ்ச்சிகள் பேசிய வீடியோவானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இந்த வீடியோவில் ஸ்ரீவித்யா உடன் ஏற்பட்ட காதல் குறித்து பேசுகையில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கும் போது கமலின் வயது 19 என்று கூறி இருக்கிறார். என்னுடைய திறமை பற்றி எனக்கு எடுத்து கூறியது என்னுடைய காதலி மற்றும் தோழியான ஸ்ரீ வித்யா தான்.

இந்த படத்தின் மூலம் ஏற்பட்ட காதலானது எங்களுள் கடைசி வரை இருந்தது. அதற்கு திருமணம் என்ற ஒரு பந்தம் அவசியமானது அல்ல. 2015 அன்று வெளி வந்த இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

இது போலவே ஸ்ரீவித்யாவும் ஒரு பேட்டியில் தான் கமலை காதலித்ததாகவும் அது இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்திற்கு செல்லக்கூடிய நிலையில் இருந்தது. திரையுலக பிரமுகர்களுக்கு தெரியும். எனினும் எனது அம்மா இருவரையும் அழைத்து பேசியதால் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது.

திரையுலகில் இருவரும் வளர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் திருமணம் தேவையா? என்று என் அம்மா கேட்க கமலுக்கு கோபம் ஏற்பட்டு வீட்டில் இருந்து சென்று விட்டார். இதனை அடுத்து அவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் ஸ்ரீவித்யா உடன் இருந்த காதலை பிரேக் அப் செய்துவிட்டு வாணி கணபதியை திருமணம் செய்து கொண்ட போது எனக்கு எல்லாமே இருண்டு விட்டது என்று கூறி இருக்கிறார். இதனை அடுத்து பலரது எதிர்ப்பையும் மீறி ஜான் தாமஸ் என்ற உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை சூனியம் ஆக்கிக் கொண்டார்.

இவர் தனது சொத்துக்களை அபகரித்துக் கொண்ட கணவன் மீது வழக்கு தொடர்ந்து தனது இறுதி நாட்களில் சொத்துக்களை மீட்டெடுத்தார். எனினும் 2006 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் இறுதியாக கமலஹாசனை சந்தித்து விட்டு இறந்திருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவருக்குள்ளும் காதல் இருந்ததின் காரணத்தால் தான் ஸ்ரீவித்யா அழைத்தவுடன் கமலஹாசன் இறக்கும் தருவாயில் சென்று பார்த்திருக்கிறார் என அனைவரும் கூறி வருகிறார்கள்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

சின்ன வயசுலேயே அந்த நடிகரை கல்யாணம் கட்டிக்க ஆசை.. உண்மையை உளறிய அனிமல் பட நடிகை!!

சின்ன வயசுலேயே அந்த நடிகரை கல்யாணம் கட்டிக்க ஆசை.. உண்மையை உளறிய அனிமல் பட நடிகை!!

யாராக இருந்தாலும் சின்ன வயதில் அவர்களுக்கு என்று சின்ன சின்ன ஆசைகள் எழுவது இயற்கை தான். அந்த வகையில் திரைப்படங்களில் …

Exit mobile version