தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ் மகா நடிப்பு படத்திற்காக தேசிய விருதை பெற்றனர். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படு பிஸியாக நடிகையாக இருப்பவர்.
தமிழைப் பொறுத்தவரை இவர் தற்போது மாமன்னன், சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாதா போன்ற படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
இதில் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக இது அமையும் என தெரியவந்துள்ளது. அதுபோலவே ஜெயம் ரவிக்கு ஜோடியாக சைரன் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் லேடி சூப்பர் ஸ்டார் திரிஷா போல கதாநாயகிகளுக்கு முக்கிய தக முக்கியத்துவம் தரக்கூடிய படங்களில் நடிக்க விருப்பப்பட்டதன் காரணமாக ரிவால்டர் ரீட்டா மற்றும் ரகு தாததா இந்த இரண்டு படங்களுமே கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களாக உள்ளது.
தமிழைப் போலவே தெலுங்கிலும் சக்கை போடு போட்டு வரும் இவர் போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.
இது அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் ஆகும். அதுபோலவே இவர் தெலுங்கு படமான தசராவின் நடிகர் நாணிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இவர் அண்மையில் தான் சூட்டிங்கை முடித்து இருந்தார். இந்த நிலையில் தசரா படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நாளின் போது கீர்த்தி சுரேஷ் செய்த தங்கமான செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆட்டிவிட்டது.
அப்படி என்ன அவர் செய்தார் என்று நீங்கள் நினைப்பது நன்றாக புரிகிறது. சூட்டிங்கில் தன்னோடு பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் என 130 பேருக்கு தலா 2 கிராம் தங்க காசினை பரிசாக வழங்கியிருக்கிறார். இவர் செய்த எந்த செயலால் பாராட்டுக்கள் தற்போது அவருக்கு குவிந்து வருகிறது.