நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே நல்ல நடிகை என்ற பெயரை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் என்ற படத்தில், பழம்பெரும் நடிகை சாவித்திரி கேரக்டரில் நடித்திருந்தார்.
ரஜினிக்கு தங்கையாாக அண்ணாத்தே படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் விஜய், விஷால், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா என்ற படம், வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஸ்ரீகாந்த் ஒடவா இயக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் இப்படத்தில், புரமோசன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசிய கீர்த்தி சுரேஷ், நடிகை நயன்தாராவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
இப்போது, பெண்களை மையப்படுத்தும் கேரக்டர்கள் கொண்ட படங்கள், அதிகமாக வருகிறது. அதற்கு முக்கிய காரணம், நயன்தாரா தான். அவர்தான் அத்தகைய கதாபாத்திரங்களில் விரும்பி நடித்தார்.
அப்படி ஒரு படம்தான் மாயா. மாயா படம் வந்த பிறகுதான், பெண் கேரக்டருக்கு முக்கியத்துவம் என்ற மாற்றம், சினிமாவில் வந்தது. அதை பார்த்துதான் மற்ற நடிகைகளும் பெண் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வெற்றி பெற ஆசைப்படுகின்றனர், என்று கூறியுள்ளார்.
வழக்கமாக, பெண்கள் பொறாமை குணத்துடன் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதே வழக்கம். ஆனால், உயர்ந்த குணத்துடன் சீனியர் நடிகையான நயன்தாராவை, கீர்த்தி சுரேஷ் புகழ்ந்து பேசி இருப்பது வைரலாகி வருகிறது.