புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த இரண்டாவது நாளே மரணித்த தம்பதியினர்..! – நடந்தது இது தான் ..!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரவீந்தரன் மற்றும் உஷா தம்பதியினர் இரண்டு தினங்களுக்கு முன்பு அவர்கள் புதிதாக கட்டிய வீட்டில்  தனது மகள் ரிந்தியாவுடன் கிரகபிரவேஷம் செய்து குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், இன்று பயங்கர அலறல் சத்தத்துடன் மகள் ரிந்தியா உடலில் தீயுடன் ஓடி வந்துள்ளார். இவரது கூச்சல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து, தீயில் சிக்கிய ரவீந்திரன் மற்றும் உஷா ஆகியோரை காப்பாற்ற தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீயணைப்பு படையினரின் தீவிர முயற்சிக்கு பின்னர் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம், மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்க கூடும் என முதல் கட்ட விசாரணையின் போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மகள் ரிந்தியா பலமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …