“கிளாமர் பாம் கிரண்..” கடைசியா எங்க வந்திருக்காங்க பாருங்க..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழ் படங்களில் நடித்து, ரசிகர் மனங்களை கிறங்கடித்தவர் கிரண். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகைகளில் இவரும் ஒருவர். விக்ரம் நடித்த ஜெமினி படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில், வின்னர் படத்திலும் படு கிளாமராக நடித்து, ரசிகர்களின் மனதில், பசை போல ஒட்டிக்கொண்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிரண் நடித்திருக்கிறார். அன்பே சிவம், திவான், குரு சிஷ்யன், ஆம்பள, சின்னா, பரசுராம், தென்னவன், நியூ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் கிரண் நடித்திருக்கிறார்.

இதில், சில காட்சிகளில் அவர் நடித்த படங்களும் உண்டு.சில ஆண்டுகளுக்கு முன், சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்கா படத்தில், ஹீரோயின் அம்மாவாக, அதாவது சுந்தர் சி யின் மாமியாராக நடித்திருந்தார் கிரண்.

கடந்த 2003ல், சுந்தர் சி இயக்கி, பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில்தான், கிளாமரின் உச்சத்தை தொட்டு இருந்தார் கிரண். அதில் வரும் பாடல் காட்சி ஒன்றில், கடற்கரை மணலில் டூ பீஸ் உடையில், குலுங்க குலுங்க ஓடி வந்த கிரண், இன்றும் ரசிகர்களின் மனதை விட்டு அகலவில்லை. அதே வேளையில், பட வாய்ப்புகள் இல்லாத இன்றைய நிலையிலும், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க கிரண் தயங்குவதில்லை.

அடிக்கடி தனது, கவர்ச்சி புகைப்படங்களை, நடன வீடியோ காட்சிகளை வெளியிட்டு, ரசிகர்களை தொடர்ந்து சூடேற்றி வருகிறார். ரசிகர்களின் மனதை கவர்ந்தது போல, தயாரிப்பாளர், ஹீரோக்கள் மனதை தொட்டு நமக்கு பட வாய்ப்புகள் மீண்டும் குவியாதா, பழையபடி சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாமே, என்ற ஆசையில்தான், பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.ஆனால், அவர் ஆசை இதுவரை நிறைவேறவே இல்லை.

இந்நிலையில், திடீரென அவரது வலைதள பக்கத்தில் பிங்க் நிற சுடிதார் அணிந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் நிற்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருக்கிறார் கிரண். அடக்க ஒடுக்கமாக, சற்று வெட்கப்பட்டபடி சுடிதார் உடையில் காணப்படும் கிரணை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அட உண்மையிலேயே இது நம்ம கவர்ச்சிப் புயல் கிரண்தானா? என ஆச்சரியப்பட்டு போகின்றனர்.

வழக்கமாக கிரண் அணியும் ஆடைகளில், இது சம்பந்தமே இல்லாமல் உள்ளதே என இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் வியந்து போகின்றனர். இல்லை என்று தன்னை தேடி வருபவர்களுக்கு எல்லாம், வாரி வாரி கொடுக்கும் வள்ளல் பெருமாள் திருப்பதி ஏழுமலையான்.

பட வாய்ப்புகள் இன்றி தவிக்கும் கிரணும், தனக்கு பட வாய்ப்புகள் கேட்டு, பண மழை கொட்டும் பிரார்த்தனையை வைக்க தான், திருப்பதிக்கு சென்றிருக்கிறார். திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்ற பழமொழி, கிரண் சினிமா வாழ்விலும் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version