“நான் மட்டும் தான் இருக்கேன்…” படுக்கையில் குப்புற படுத்துக்கொண்டு.. கீர்த்தி ஷெட்டி..- இணையத்தை திணறடிக்கும் போட்டோஸ்..!

புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த ‘உப்பெனா’ படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி( Krithi Shetty ). தெலுங்கில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

கிர்த்தி தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் அறிமுகம் ஆக உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.

ஆனால், தெலுங்கைத் தவிர வேறு எந்த மொழியிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் தன்னுடைய தற்போதைய படங்கள் குறித்து, டுவிட்டரில், “என்னுடைய அடுத்த படங்களைப் பற்றி பலவிதமான வதந்திகளைக் கேட்கிறேன்.

இதுவரையில் நான் மூன்று படங்களில் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். நானி காரு, சுதீர் பாபு காரு, ராம் காரு ஆகியோருடன் தலா ஒரு படங்களில் நடிக்கிறேன். மேலும் ஒத்துக் கொண்ட படங்களில் நடித்து முடிப்பது மட்டுமே தற்போது என்னுடைய கவனம் இருக்கிறது.

அடுத்து புதிய படங்களில் கையெழுத்திட்டால், நான் நிச்சயம் பதிவிடுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மட்டும் கிட்ட தட்ட 23 லட்சம் பாலோவர்களை கொண்டுள்ள அவர் ரசிகர்களை ஏமாற்றி விட கூடாது என்பதற்காக அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது படுக்கையில் தன்னுடைய அழகு பளீச்சென தெரியும் படி அமர்ந்து கொண்டு சில புகைப்படங்களையும்.. லோ நெக் உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி சில புகைப்படங்களையும் வெளியிட்டு “நான் மட்டும் தான் இருக்கேன்..” என கேப்ஷன் வைத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், இவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.