சமீப காலமாகவே ஜெயம்ரவி மற்றும் அவர் மனைவி ஆர்த்தி. இவர்கள் இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயம் அதிகமாக சமூக வலைதளங்களில் ட்ரண்டாக துவங்கியிருக்கின்றன. ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக திடீரென்று ஒரு பதிவை வெளியிட்டார்.
அதற்கு பதில் அளித்த ஆர்த்தி கூறும்பொழுது ஜெயம் ரவி விவாகரத்து குறித்து என்னிடம் எதுவுமே கூறவில்லை. எனக்கு அவர் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்பதே தெரியாது. இதனால் நான் மிகவும் மன கஷ்டத்தில் இருக்கிறேன் என்ற ஆர்த்தி.
ஆம்பளையே கிடையாது..
குழந்தைகளும் குழப்பத்தில் இருக்கின்றனர். 18 வருட இந்த திருமண வாழ்க்கையை அதனால் பொய் போல தோன்றுகிறது என்றெல்லாம் பேசி இருந்தார் ஆர்த்தி. இந்த நிலையில் ஆர்த்திக்கு ஒரு பக்கம் ஆதரவாகவும் ஒரு பக்கம் ஜெயம் ரவிக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் பேசி வந்தனர்.
ஏற்கனவே இரண்டு முறை நான் ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டேன். அப்படியும் கூட எனக்கு எதுவுமே தெரியாது என்று ஆர்த்தி கூறுவது எனக்கு வியப்பளிக்கிறது என்று பதிலளித்து இருந்தார் ஜெயம் ரவி.
இந்த நிலையில் ஜெயம் ரவியின் இந்த விவாகரத்து முடிவை விமர்சிக்கும் வகையில் சமீபத்தில் குஷ்பு ஒரு பேட்டியில் பேசியிருந்தார். நேரடியாக அவர் ஜெயம் ரவி என்று பேசவில்லை என்றாலும் கூட அவர் ஜெயம் ரவியை தான் பேசியுள்ளார் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் நிலவி வருகின்றன.
பிரபல நடிகர் குறித்த குஷ்பு
அந்த பதிவில் அவர் கூறியதாவது குடும்பத்தை உயர்வாக போற்றுபவன் தான் உண்மையான உயர்ந்த மனிதன் என்றும் அவரது தேவைகள் ஆசைகள் மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான். திருமண வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் வரத்தான் செய்யும்.
தவறுகளும் நடக்கும் அதற்காக ஒரு மனிதன் அவனது குடும்பத்தை விளக்கி வைக்க கூடாது. ஒரு கட்டத்தில் இருவருக்குமான அன்பு குறையலாம் ஆனால் மரியாதை குறையக்கூடாது. சுயநலமாக நாம் எடுக்கும் முடிவு பெரும்பாலும் பூமராங் போல திரும்பவும் நமக்கே திரும்ப வரும்.
தனது குழந்தைகளையும் மனைவியையும் மதிப்பவனே உண்மையான ஆண் அவர்களை விட்டு செல்பவன் நல்ல மனிதன் அல்ல, என்று குஷ்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குஷ்பூவின் இந்த பதிவு வைரலாக துவங்கியிருக்கிறது.