ஒரு நடிகர் கட்டிய சினிமா தாலியை கழட்டாத பத்மினி..! அந்த நடிகர் யார் தெரியுமா...?

ஒரு நடிகர் கட்டிய சினிமா தாலியை கழட்டாத பத்மினி..! அந்த நடிகர் யார் தெரியுமா…?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து நாட்டிய பேரொளி என்ற பெயரைப் பெற்ற பத்மினி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜா புரா என்ற பகுதியில் பிறந்து வளர்ந்தவர். இவர்களை திருவாங்கூர் சகோதரிகள் என்று அழைப்பார்கள்.

ஒரு நடிகர் கட்டிய சினிமா தாலியை கழட்டாத பத்மினி..! அந்த நடிகர் யார் தெரியுமா...?

நான்கு வயதில் இருந்தே நாட்டிய பயிற்சியை பெற்ற பத்மினி கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றவர்.மேலும் 17 வயதில் திரையுலகில் புகுந்ததை அடுத்து பெரு வாரியான ரசிகர்களை பெற்றவர்.

நடிகை பத்மினி..

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை பத்மினி நடனம் ஆடி முதல் முதலாக வெளி வந்த திரைப்படம் கன்னிகா என்ற திரைப்படமாகும். இது 1947 ஆம் ஆண்டு வெளி வந்தது இந்த படத்தில் சிவமோஹினி வேடத்தில் நடனமாடி இருப்பார்.

இதனை அடுத்து மணமகள் படத்தில் நடித்த இவர் தமிழில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினிகணேசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்திருக்கிறார். ஏறத்தாழ 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் சிவாஜியோடு மட்டும் 59 படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு நடிகர் கட்டிய சினிமா தாலியை கழட்டாத பத்மினி..! அந்த நடிகர் யார் தெரியுமா...?

அந்த வகையில் நடிகை பத்மினி சிவாஜியோடு இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. இந்த படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனதை அடுத்து வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்திருப்பார்.

இந்தப் படத்தில் பத்மினிக்கும் வைஜெயந்தி மாலாவிற்கும் நடக்கும் நடனப் போட்டி ரசிகர்களின் மத்தியில் வெகுவாக ரசிக்கப்பட்டது என்று சொல்லலாம்.

நடிகர் கட்டிய தாலியை கலக்காத பத்மினி..

திரையுலகில் பீக்கில் இருந்த சமயத்திலேயே நடிகை பத்மினி டாக்டர் ராமச்சந்திரன் என்பவரை 1961 ஆம் ஆண்டு மணந்ததை அடுத்து 1977 அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் குடியேறி அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆட்ஸ என்ற பெயரில் நாட்டிய பள்ளியை நிறுவினார்.

ஒரு நடிகர் கட்டிய சினிமா தாலியை கழட்டாத பத்மினி..! அந்த நடிகர் யார் தெரியுமா...?

இந்நிலையில் சிவாஜிகணேசனுக்கு உண்மையான திருமணம் நடக்க இருந்த சமயத்தில் ஷூட்டிங்கில் இருந்த சிவாஜி கணேசன் நடிகை பத்மினி யோடு இணைந்து நடித்த காட்சியில் அவருக்கு ரீல் தாலியை கட்டிவிட்டு ரியல் தாலியை கட்ட சுவாமிமலைக்கு செல்ல வேண்டி இருந்ததாக குட்டி பத்மினி அண்மை பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

யார் அந்த நடிகர் தெரியுமா?

இந்நிலையில் நடிகை பத்மினி சிவாஜி கணேசன் கட்டிய தாலியை ஷாலினி அலைபாயுதே படத்தில் எப்படி மறைத்து வைத்திருந்தாரோ அது போல யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாக சொல்லி இருக்கிறார்.

அடுத்து பத்மினியின் சகோதரி ராகினி இதனை கண்டுபிடித்து தனது அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார். அடுத்து இவரது அம்மா பத்மினியிடம் சண்டையிட்டு அந்த தாடியை கழட்ட வைத்து விட்டார்.

ஒரு நடிகர் கட்டிய சினிமா தாலியை கழட்டாத பத்மினி..! அந்த நடிகர் யார் தெரியுமா...?

சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் சிவாஜி கணேசன் கட்டிய சினிமா தாடியை கழட்டாத பத்மினிக்கு புரியும் படி அனைத்தையும் எடுத்து சொல்லி கழட்ட வைத்தார்

மேலும் அம்மாவின் பேச்சுக்களை கேட்டு பயந்து போன அவர் அந்த தாலியை கழற்றிவிட்டார் என்று சொன்ன விஷயம் ஆனது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பத்மினிக்கு சிவாஜி மேல் இவ்வளவு ஈடுபாடு இருந்ததா என்று கேட்கவும் வைத்துவிட்டது.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version