நடிகை லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார் இவர் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு நடிக்க வந்தவர் திருமதிசெல்வம், அப்பா போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சின்னத்திரையில் நடித்து கொண்டிருந்த பொழுது சக நடிகர் ராஜ்குமார் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டு பக்கமும் நடித்து வருகின்றார்.
தில்லாலங்கடி, நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலம் ஆகியுள்ளார். நடிகை லதா ராவ் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கின்றார்.
நடிகை லதா ராவ் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவாக இருந்தாலும் சரி சின்னத்திரையில் இருந்தாலும் சரியாக தமிழ் பேசும் நடிகைகள் என்றால் குறைவுதான்.
சரளமாக தமிழ் பேசக்கூடிய நடிகைகள் என்ற பட்டியல் எடுத்தால் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தப் பட்டியலில் சரளமாக தமிழ் பேச தெரிந்த நடிகைகளில் நடிகையாக வலம் வருபவர் லதா ராவ்.
நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
சமீபத்தில் வெளியான கடிகார மனிதர்கள் என்ற திரைப்படத்தில் நடிகர் கிஷோர் ஜோடியாக நடித்திருந்தார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தமிழ் சினிமா தவறவிட்ட தரமான நாட்டுக் கட்டை என்று அவரை வர்ணித்தும் வருகின்றனர்.