Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

தமன்னா எல்லாம் ஓரமா போயிடு.. அரண்மனை பாடலுக்கு சீரியல் நடிகை மான்யா ஆனந்த் கவர்ச்சி குத்தாட்டம்..!

தென்னிந்தியாவை பொறுத்த வரையில் மற்ற மொழிகளை விடவும் தமிழ் மொழியில் சீரியல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து சீரியல்கள்தான் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும்.

காலையில் ஒரு இரண்டு அல்லது மூன்று சீரியல்கள் அல்லது இரவு நேரங்களில் ஒரு நான்கு அல்லது ஐந்து சீரியல்கள் வரை ஒளிபரப்பாகும் ஆனால் இப்பொழுது எல்லாம் காலை துவங்கி இரவு வரை சீரியல் தான் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகின்றன.

சீரியல் போட்டிகள்:

ஏனெனில் நாடகங்களை ஒளிபரப்புவதில் தற்சமயம் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையே பெரிய போட்டிகள் நிலவி வருகின்றன. ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி இந்த மூன்று முன்னணி சேனல்களும் இதில் அதிக போட்டியில் இருக்கின்றன.

இதனால் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்களை மட்டும்தான் போடுகின்றனர். இடையில் சில நேரம் மட்டும்தான் சீரியல் இல்லாமல் இருக்கிறது என்கிற நிலைமை இருக்கிறது. அதிலும் சன் டிவி இவர்களுக்கெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை கூட சீரியலை ஒளிப்பரப்பி வருகின்றனர்.

---- Advertisement ----

இதனால் மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகைகளை எல்லாம் தமிழில் சீரியல்களுக்கு நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது சன் டிவி. அந்த வகையில் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உள்ள சீரியல்களில் பிரபலமாக இருக்கும் நடிகைகளை அழைத்து வந்து தமிழில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

நடிகை மான்யா ஆனந்த்:

எதிர்நீச்சல் நாடகத்தில் வரும் மதுமிதா கூட அப்படி வந்தவர்தான். இந்த நிலையில் அதே மாதிரி வேற்று மொழியில் இருந்து தமிழ் தொலைக்காட்சி சீரியல்களுக்கு கொண்டுவரப்பட்டவர்தான் நடிகை மான்யா ஆனந்த். சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மான்யா.

துளசி என்கிற அவருடைய கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் வானத்தைப்போல சீரியல் தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங்கை கொண்ட சீரியலாக இருந்து வருவதால் அதை தொடர்ந்து நல்லபடியாக கொண்டு போவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மான்யா சிறப்பாக நடித்து வருவதால் தொடர்ந்து அவரை நடிக்க வைத்துக் கொண்டிருந்தனர். இதற்கு முன்பு வேறு ஒருவர்தான் இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் அவரது நடிப்பு சரியில்லை என்று மான்யா ஆனந்தை அதற்கு பிறகு மாற்றி விட்டனர்.

இந்த நிலையில் சீரியல்களில் என்னதான் புடவை கட்டிக்கொண்டு நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி மாடர்ன் உடையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை மான்யா ஆனந்த் வேலையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகமாக வைரல் ஆகியும் வருகிறது

Continue Reading

More in Actress

Trending

To Top