அட என்ன கொடுமை டா … மூணு மாசத்துக்கு முன்னாடி அம்மாவ இழந்தாங்க இப்ப அப்பாவா? கதறும் மகேஷ் பாபு…!!

 தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கும் மகேஷ் பாபுவை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் இவர் கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்தியாவில் மிகப் புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

 இந்நிலையில் நேற்று பழம் பெரும் நடிகரான மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணா உடல் நலக்குறைவால் மரணமடைந்திருக்கிறார். அவரின் மறைவு குறித்து திரை உலக பிரபலங்கள் அனைவரும் வருத்தத்தை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

 இந்த வருடத்திலேயே இவரது தாயார் ஆன இந்திரா தேவி  மூன்று மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்திருந்தார்.

அதை அடுத்து தற்போது இவரது தந்தையும் மரணம் அடைந்த இருப்பதால் அவர்கள் வீட்டில் துக்கம் அதிக அளவு காணப்படுகிறது.

 தந்தை மற்றும் தாயை இழந்து வாடும் மகேஷ் பாபுவுக்கு தெலுங்கு பட உலகில் அனைவரும் வருத்தத்தை தெரிவித்து இருப்பதோடு தங்களது ஆதரவையும் தெரிவித்திருக்கிறார்கள்.

எனினும் துக்கம் அதிகமாக இருக்கக்கூடிய மகேஷ்பாபு தற்போது ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார் என்பது அவரது முகத்தை பார்த்தாலே  தெரியும்.

 இதனை அடுத்து இவரது ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருப்பதோடு அவருக்கு மன ஆறுதல்கள் தரக்கூடிய சொற்களையும் கூறி வருகிறார்கள்.

இதனால் விரைவில் மகேஷ்பாபு எந்த துக்கத்தில் இருந்து வெளிவந்து சகஜ நிலைக்கு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.

பிறந்தவர்கள் எல்லாம் ஒரு நாள் மண்ணுக்குச் செல்வது இயல்பான ஒன்றுதான் இருந்தாலும் பந்தம்  ,பாசம் இவற்றால் பிணைக்கப்பட்டு இருக்கக்கூடிய மனித உறவுகளுக்குள் இந்த இறப்பு நிகழ்வுகள் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி விடுவதோடு மனதில் சில சஞ்சலங்களையும் தரும்.

பட்டினத்தாரின் கூற்றுப்படி நாளை சாகக்கூடியவர்கள் இன்று இறந்திருப்பவர்களை பார்த்து நாமும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம் என்பது தெரியாமல் கண்ணீர் விடுவார் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் போது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் மட்டுமல்லாமல் அனைத்தும் அடிபட்டு போகும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version