Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கூட்ட நெரிசலில் கண்ட இடத்தில் கை வைத்து கசக்கிய நபர்கள்.. தவித்த மமிதா பைஜூ.. தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிகையாக வலம் வரும் நடிகை மமிதா பைஜூ 2017 – ஆம் ஆண்டு வெளி வந்த சர்வோபரி பால்கரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் கேரளாவில் இருக்கும் கோட்டைய மாவட்டத்தில் உள்ள கிடாங்கூரை சேர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை மேரிமவுண்ட் பப்ளிக் பள்ளியிலும், கல்லூரி படிப்பை கொச்சியிலும் படித்து முடித்திருக்கும் இவர் உளவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

நடிகை மமிதா பைஜூ..

மமிதா திரைப்படங்கள் மட்டுமல்லாமல் குறும் படத்திலும் நடித்திருக்க கூடியவர்.மேலும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மலையாள திரை உலகில் இந்த ஆண்டு வெளியான பிரேமாலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.

மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் ஜி வி பிரகாஷோடு இணைந்து ரிபெல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எனினும் எந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை தரவில்லை.

மேலும் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகள் பலரும் விளம்பரங்கள், கடை திறப்பு விழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வது புதிய விஷயம் இல்லை.

அந்த வகையில் நடிகை மமிதா அண்மையில் சென்னையில் உள்ள வி ஆர் மாலுக்கு திறப்பு விழாவுக்காக வந்திருந்தார்.

கண்ட இடத்தில் கை வைத்த..

இந்த விஆர் மால் கடை திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில் அங்கு சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த மமிதா.

இந்த சூழ்நிலையில் இந்த வாய்ப்பை ரசிகர்கள் என்ற பெயரில் சில விஷமிகள் அவர்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள நினைத்ததை அடுத்து அவர்களது கை மமிதா மேல் பட கூடாத இடத்தில் பட்டது. இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளானார் நடிகை மமிதா.

அத்துடன் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் இருந்ததால் போலீசாரும் என்ன செய்வது என்று தெரியாமல் அசந்த நேரத்தில் கைவரிசியை காட்டிய சிலரால் தவித்துப் போன மமிதாவின் வீடியோ தற்போது இணையங்களில்  பரவி வருகிறது.

தீயாய் பரவும் வீடியோ..

தற்போது கூட்டத்தில் கண்ட இடத்தில் கை வைத்து கசக்கிய நபர்களின் செயலால்  தவித்த மமீதா பைஜு பற்றிய வீடியோவானது இணையத்தில் தீயாய் பரவி வருவதால் இதனை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

மேலும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரபலமான நடிகைகள் வரும்போது உரிய பாதுகாப்பை முன்னெச்சரிக்கையாக செய்வதின் அவசியத்தை இந்த சமபவம் உணர்த்தியுள்ளது.

 எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு செயல்படுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version