பெங்களூருவை சொந்த ஊராகக் கொண்டவர் நடிகை மனிஷா யாதவ் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் மற்றும் மீடியா துறையில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.
இதன் மூலம் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கண்களில் சிக்கிய இவர் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இருந்தாலும் கூட மறுபக்கம் சமூக விழிப்புணர்வுக்கான படம் பெண் குழந்தைகள் பார்க்க வேண்டிய படம் என்று பாசிட்டிவான விமர்சனங்களும் வந்தன இப்படி இதனுடைய முதல் படமே ரசிகர்களால் பேசப்பட்ட படமாக மாறியதால் நடிகை மனிஷா யாதவ் அடிக்கடி பட வாய்ப்புகள் குவிந்தன.
தொடர்ந்து தமிழில் நடிக்க தொடங்கியவர் ஆரம்பத்தில் குடும்பப்பாங்கனான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால் சினிமாவில் இது வேலைக்காக என்பதை தெரிந்து கொண்டு திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் கவர்ச்சி காட்டேரியாக தன்னுடைய கிளாமர் வேட்டையை நடத்தினார்.
இந்த படத்தில் ஏகப்பட்ட கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்த ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார் அம்மணி. சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன இவர் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
தற்பொழுது மீண்டும் நடிக்க ஆசை வந்துவிட்டதோ..? என்னவோ..? தெரியவில்லை. தன்னுடைய உடல் எடையை குறைத்து அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை செய்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார்.
மற்றும் அதன் சார்ந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். எனவே மீண்டும் இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்குமா..? இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.