நடிகை மீனா 80, 90 காலகட்டங்களில் உச்சகட்ட நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் ஜொலித்தவர். இவர் தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களோடு இணைந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் உச்ச கட்டத்தில் இருந்த போதே இவர் 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.
மிக சிறப்பாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் புயல் அடித்தது போல இவரது கணவரான வித்தியாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத நிலையில் மரணம் அடைந்தார்.
கணவன் இழந்த துக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா சமீபகாலமாக நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்திகள் சமூக வலைதளம் எங்கும் பரவியது.
இதனை அடுத்து எந்த தகவல் ஆனது உண்மைக்கு புறம்பானது என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தன் வேலையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கும் மீனா, மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்திகள் தற்போது உலா வரத் துவங்கி விட்டது.
அதில் குறிப்பாக மீனா குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த செய்தியும் வதந்தியாக தான் இருக்கும் என்று மீனா தரப்பிலிருந்து ஆணித்தரமான பதில்கள் வந்துவிட்டது.
இதை அடுத்து இவரது இரனா இரண்டாம் திருமணம் பற்றிய முக்கிய செய்திக்கு இவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது.
அது மட்டுமல்லாமல் ஏற்கனவே இது போன்ற வதந்திகள் பரவிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த வகையில் மீண்டும் இந்த வதந்தி கிளம்பியுள்ளதால் அதற்கும் முற்றுப்புள்ளி தரக்கூடிய பகுதியில் இவர் பதில் அளித்திருக்கிறார்.
எனவே இது போன்று தொடர்ந்து வருந்திகளை பரப்பி சங்கடபடுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.