Mirnaa : சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்த நடிகை மிர்ணா.
ஜெய்லர் படத்தில் நடித்த பிறகு நடிகை மிர்ணாவிற்கு அதிகளவு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் தாதுபுத்திரி என்ற தொடரில் தனது நிஜப் பெயரோடு நடித்திருக்கிறார்.
இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் இவரது உண்மையான பெயர் அதிதி மேனன் என்பதாகும்.
தமிழில் முதல் முதலில் 2016 ஆம் ஆண்டு பட்டதாரி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அண்மையில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து தனது நடிப்புத் திறனை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு துபாயில் மென் பொருள் உற்பத்தி சம்பந்தப்பட்ட பணியில் ஈடுபட்டு வந்த இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது பலரையும் திகைக்க வைக்கக் கூடிய வகையில் உள்ளது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஒரு நிமிஷம் பிட்டு படம் என நினைத்து கண்களை மூடி விட்டோம் எனக் கூறியிருக்கிறார்கள். மேலும் கைகளால் கன்னத்தை தொட்டபடி எதற்காக இப்படி செய்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி வைத்திருக்கிறார்கள்.
ஒரு சமயம் மொத்த அழகையும் குத்தகைக்கு விடத்தான் இப்படி வீடியோவை வெளியிட்டு இருக்கிறாரா? எனவும் கேட்டிருக்கிறார்கள்.
வீடியோவில் குளோசப்பில் முகத்தினை முழுவதும் காட்டி ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த வீடியோ அதிக அளவு லைக்களையும் கமெண்டுகளையும் பெற்றுள்ளது.
மேலும் சில ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து அட நம்ம ஜெயிலர் பட மருமகளா? என கேட்டு ஷாக்காகி விட்டார்கள் என கூறலாம்.