“பணம் பல பக்கம் இருந்து வந்து சேர வேண்டுமா..!” – அப்ப கடுகு பரிகாரம் போதும்..!

நமது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று தான் தினமும் நாம் பல வழிகளில் உழைக்கிறோம். அப்படி உழைத்து நாம் பெறுகின்ற பணத்தை நல்ல முறையில் சேமித்து வைப்பதின் மூலம் நமக்கு சிறப்பான எதிர்காலம் அமையும்.

மேலும் நீங்கள் உங்கள் பணத்தை தர்மம், தானம் செய்யும் போது உங்கள் கைகளில் பணம் தாராளமாக அதிகரித்த வண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தாங்காது. அப்படி கையில் தாங்காதவர்கள் ஆன்மீக ரீதியாக தங்களது பணத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்.

பணத்தை தங்க வைக்கும் கடுகு பரிகாரம்

நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை தங்க வைப்பதற்கு தாந்த்ரீக ரீதியாக செய்யக்கூடிய பரிகாரம் தான் இந்தக் கடுகு பரிகாரம்.

 இந்த கடுகு பரிகாரத்திற்காக நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய பொருள் கடுகு தான். இந்தக் கடுகை நீங்கள் ஒரு பிளாஸ்டிக் டப்பா அல்லது சில்வர் டப்பா ஆகியவற்றில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் உங்கள் வீட்டில் உண்டியல்கள் இருந்தால் அந்த உண்டியல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்படி நீங்கள் டப்பாக்களில் நிரப்பி வைத்திருக்கும் கடுகில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு வைக்க வேண்டும். நீங்கள் டப்பாவை திறக்கும் போது கண்ணில் கடுகு மட்டும் தெரியும் அளவுக்கு அந்த ரூபாய் காசை நீங்கள் ஆழமாக புதைத்து வைத்து விடுங்கள்.

நீங்கள் இவ்வாறு செய்து வைத்திருக்கக் கூடிய விஷயத்தை உங்கள் வீட்டு நபர்கள் மட்டுமல்லாமல் வேறு யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில் அந்த கடுகு டப்பாவில் சேர்ந்திருக்கும் பணத்தை எடுத்து முடியாதவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். இல்லையென்றால் பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம்.

இதனைச் செய்யும்போது உங்கள் கையில் தாராளமாக பணம் எப்போதும் புழங்கும். நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பார்த்து உங்களுடைய கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version