தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக தன் தம்பியை பகடைக்காயாக பயன்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர் செல்வராகவன் தன் தம்பி தனுஷ்க்கே திரை உலகில் தனி உலகையே படைத்த தந்த பெருமை இவரைச் சாரும்.
தற்போது இவர் இயக்கிவரும் நானே வருவேன் படத்தில் தன் தம்பியை கதாநாயகனாக நடிக்க வைத்துள்ள செல்வராகவன் தற்போது இந்த படத்தின் டீசரை வெளியிட்டு இருக்கிறார்.வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீடு முடிந்த மறு நொடியே இவர் டீசரை வெளியிட்டிருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த படத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் தோன்றக்கூடிய தனுஷ்சை வைத்துப் பார்க்கும்போது இந்தப் படத்தின் கதை ஒரு சைக்கோ கதையை மையமாகக் கொண்டு இருக்க வாய்ப்பு இருப்பது போல் தெரிகிறது.மேலும் நடை உடை பாவனை அது போல தெரிகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னால் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் அவர் ஆடியிருக்கும் ஆட்டத்தை மீண்டும் நம் கண் முன்னே காட்டியிருக்கிறது வீரா சூரா பாடலுக்காக நடுக்காட்டில் நடனமாடி இருக்கும் தனுஷ்.
மேலும் இந்த டீஸ்சரின் மிகப்பெரிய திருப்புமுனையாக இருப்பது செல்வராகவனின் என்ட்ரி. அண்ணனும் தம்பியும் காடுகளிலிருந்து வெளிவரக்கூடிய சைக்கோ கேரக்டர் போலத்தான் இதனைப் பார்க்கும்போது தெரிகிறது.
இந்தப்படத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன்சங்கர்ராஜா இவர்களின் கூட்டணிக்கு இசையமைத்திருக்கிறார். இவர்கள் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் போன்ற படங்களில் மூவரும் இணைந்து வேலை பார்த்திருக்கிறார்கள்.
தற்போது வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்க எல்லி அவ்ராம் எனும் பாலிவுட் நடிகை எந்த படத்தில் அறிமுகமாகிறார் மேலும் மற்றொரு ஜோடியாக இணைகிறார். மூன்று ஜாம்பவான்கள் இணையும் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.