பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கும் நடிகை நதியா இதுவரை ஏன் கமலஹாசன் நடிக்கவில்லை என்ற உண்மையை உளறி இருக்கிறார். இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இப்போது வரைக்கும் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்து வருகிறார் நடிகை நதியா தற்பொழுதும் இளமையாக தோற்றமளிக்கும் இவருடைய இளமையின் ரகசியம்தான் என்ன என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் அவருடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுவரை ஒரு முறை கூட உலகநாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமலஹாசன் ஜோடியாக நடித்தது கிடையாது என்பது கூடுதல் தகவல் ஆனால் உண்மை என்னவென்றால் நடிகர் கமலஹாசனுக்கு ஜோடியாக நதியாவை நடிக்க கேட்டு அவர் மறுத்திருக்கிறார் என்பது தான் உண்மை.
நடிகை நதியா அவருடைய உண்மையான பெயர் என்னவென்றால் சரி நா மயிடு என்பதாகும் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவருக்கு ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்தது.
பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என அழகு தேவதையாக இருந்த நடிகை நதியாவுக்கு ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்ததில் ஆச்சரியம் இல்லை.
அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்ளாமல் பக்கத்து வீட்டு பெண் போன்ற முக பாவணியுடன் தன்னுடைய அசாத்தியமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நடிகை நதியா பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர் ஆரம்ப காலத்தில் எந்த பொருளை எடுத்தாலும் அது நதியா பெயரின் சொல்லும் அளவிற்கு இருந்தது.
நதியா செருப்பு, நதியா புடவை, நதியா பொட்டு, நதியா வளையல், நதியா கொண்டை, நதியா தோடு என பெண்கள் வழக்கமாக அணியக்கூடிய அனைத்து அழகு சாதன பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு நதியாவின் பெயரை பிராண்ட் ஆக்கினார்கள் ரசிகர்கள்.
அந்த அளவுக்கு பிரபலமாக இருந்த இவர் எதனால் கமலஹாசன் நடிக்கவில்லை தெரியுமா..? நடிகர் கமலஹாசன் படங்கள் என்றாலே கண்டிப்பாக கதாநாயகிகளுடன் லிப் லாக் முத்தக் காட்சி இருக்கும் அதற்கு நான் சம்மதம் தெரிவிக்க மாட்டேன் எனவே கமலஹாசனின் பட வாய்ப்பு தவிர்த்து விட்டேன் என்று பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் அது உண்மை கிடையாது. ஒரு முறை நடிகர் கமல்ஹாசனின் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்ட பொழுது நான் மறுத்தேன் என்பது உண்மைதான். ஆனால் அது கால்ஷீட் பிரச்சினை காரணமாக தானே தவிர வேறு எந்த ஒரு தனிப்பட்ட காரணங்களும் கிடையாது என்று கூறியிருக்கிறார் நடிகை நதியா.
அப்போது நடிகர் கமல்ஹாசனின் படத்தில் நான் நடிக்க தவறிவிட்டேன் அதன் பிறகு எனக்கு அப்படியான வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது என்பது என்னுடைய துரதிஷ்டம் என்றும் பதிவேற்றிருக்கிறார் நடிகை நதியா.