சமந்தா : நாக சைதன்யா இவர் தெலுங்கில் பிரபல நடிகர் நாக அர்ஜுனாவின் மகன் அவர். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பல வருடங்களுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகன் வலம் வந்த சமந்தாவை காதலித்து கரம் பிடித்தார்.
இவர்களின் திருமணம் சினிமா துறையில் அனைவராலும் பிரபலமாக பேசப்பட்டது இவர்களை திருமணம் செய்து பிரபல நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
அதன் பிறகு கடந்த வருடம் இந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது நாக சைதன்யா இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வருகிறார்.
இந்த படத்திற்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாக சைதன்யா செய்தியாளர்களிடம் உரையாடினால் அப்போது இவரது விவாகரத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு முதல் முதலாக மனம் திறந்து பதிலளித்தார்.
அதன்படி இவர் சமந்தாவிற்கும் இவருக்குமான உறவு எப்போதும் சந்தோஷமாகவே இருந்ததாகவும். எப்போதும் அவர்கள் சந்தோஷமாக இருந்த தருணம் அவரின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை எனவும் கூறியிருந்தார்.
மேலும் இவர்கள் இருவர் இடையே கருத்து வேறுபாடு வருவதற்கு முக்கிய காரணமே சமூக வலைதளங்களில் வந்த வதந்திகள் தான் காரணம் என கூறியுள்ளார். மேலும் இந்த வதந்தியில் மூலமே இவர்களிடையே அடிக்கடி பிரச்சினைகள் வந்துள்ளது.
மேலும் அது பெரிதாக மாறி பின்னர் இருவரும் தெரிந்து விட்டதாகவும் இவர் கூறியுள்ளார். தாங்கள் பிரிந்த பிறகும் சில ஊடகங்கள் எங்களை வைத்து வதந்திகளை பரப்பி வருகின்றனர் இது தனது மனதுக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.