ஜோதிகா நக்மாவின் தங்கச்சியே இல்ல.. 48 வயசில் அந்த ஆசை.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

ஜோதிகா நக்மாவின் தங்கச்சியே இல்ல.. 48 வயசில் அந்த ஆசை.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

மும்பையில் பிறந்து வளர்ந்தவரான ஆன நடிகை நக்மா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ,பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி ஆகிய பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்த நடிகை நக்மா தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

90ஸ் நடிகை நக்மா:

1994 ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியாகியிருந்த காதலன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் .

ஜோதிகா நக்மாவின் தங்கச்சியே இல்ல.. 48 வயசில் அந்த ஆசை.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பு கிடைக்க நடிகை நக்மா தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டார் .

மேலும், இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம் பேர் விருது பெற்று கௌரவிக்கப்பட்டார் . தொடர்ந்து அடுத்த அடுத்த நக்மாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்க தொடங்கியது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாட்ஷா திரைப்படத்தில் நடித்திருந்தார். 1995ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

தொடர் வெற்றி படங்கள்:

தொடர்ந்து லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி ஜானகிராமன், பிஸ்தா ,பெரிய தம்பி, சிட்டிசன், தீனா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

அந்த காலத்தில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து வந்த நடிகை நக்மா சில முக்கிய புள்ளிகளுடன் காதல் வயப்பட்டு ரகசியமாக வாழ்ந்து கடைசி வரை திருமணம் செய்யாமல் போய்விட்டார்.

ஜோதிகா நக்மாவின் தங்கச்சியே இல்ல.. 48 வயசில் அந்த ஆசை.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

ஆம், இவர் நடிகர் சரத்குமார் மற்றும் பிரபல கிரிக்கெட் முன்னாள் கிரிக்கெட் வீரரான கங்குலி , போஜ்புரி நடிகர் இப்படி பல பேரை நடிகை நக்மா காதலித்து பின்னர் அவர்களுடன் லிவிங் லைஃப் வாழ்ந்து அவர்களை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

பலபேருடன் காதல்… உறவு:

தற்போது 49 வயதாகும் நடிகை நக்மா இதுவரை திருமணமே செய்யாமல் அப்படியே இருந்து விட்டார். இப்படியான சமயத்தில் தனக்கு தற்போது திருமணம் செய்ய ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பப்படுவதாகவும் நடிகை நக்மா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளதை பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் பேட்டி ஒன்றில் கூறி கிண்டல் அடித்திருக்கிறார் .

ஆம், நடிகையின் அப்பாவுக்கு 49 வயதில் திருமண ஆசை வந்திருக்கிறது. இதைத்தான் நம் பெரியவர்கள் பருவத்தில் பயிர் செய் என்கிறார்கள் .

50 வயசில் அந்த ஆசை:

அரசாங்கமே பெண்களுக்கு 21 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறது. இப்படி திருமணம் செய்ய வேண்டிய வயதில் திருமணம் செய்வதை விட்டுவிட்டு பல பேருடன் தொடர்பு வைத்துக்கொண்டு வாழ்க்கை சீரழித்துக் கொண்டார் நக்மா.

காலம் கடந்த வயசில் திருமண ஆசை வந்திருக்கிறது. அதுவும் இப்போது வந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுவது தான் சிரிப்பாக இருக்கிறது.

நடிகை நக்மா சரத்குமார் உடன் காதல் வயப்பட்டு ரகசியமாக சென்னையில் பெரிய பங்களா ஒன்று எடுத்து இருவரும் வாழ்ந்து வந்தார்கள் .

சரத்குமார் உடன் உறவு:

அந்த சமயத்தில் சாயாதேவியை திருமணம் செய்து கொண்டிருந்த சரத்குமார் நக்மா உடன் உறவு கொண்டிருந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

உடனே சாயாதேவி அவருடன் சண்டை இட்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இதற்கு முக்கிய காரணமே நடிகை நக்மா தான் என்று பேசப்பட்டது.

அதை அடுத்து நக்மா படு மோசமாக விமர்சிக்கப்பட்டதால் சரத்குமாரை விட்டு பிரிந்தார். பின்ன சரத்குமார் நடிகர் ராதிகாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அதையடுத்து நக்மா தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரரான கங்குலி மற்றும் போஜ்புரி நடிகர் இப்படி அடுத்தடுத்து பல பேருடன் காதலித்து அவர்களுடன் ரகசியமாக வாழ்ந்து திருமணமே செய்யாமல் ஏமாற்றப்பட்டார் .

நக்மா ஜோதிகாவின் சகோதரி இல்லை:

ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் மீது அவருக்கு விருப்பமே இல்லாமல் போய்விட்டது . ஆனால் 49 வயதில் வந்து திருமணத்திற்கு ஆசைப்படுகிறார் .

ஜோதிகா நக்மாவின் தங்கச்சியே இல்ல.. 48 வயசில் அந்த ஆசை.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

அதுமட்டுமில்லாமல் ஜோதிகாவின் சகோதரி தான் நக்மா என்று கூறுகிறார்கள். அது உண்மை இல்லை உண்மையில் ஜோதிகாவின் பெரியம்மாவின் மகள்தான் நடிகை நக்மா.

ஜோதிகாவின் சொந்த சகோதரி ரோஷினி தான். இவர் அருண் விஜய்யுடன் தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது என பயில்வான் கூறியுள்ளார்.