Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

படுக்கையில் லைட் ஆஃப் பண்ண மாட்டேன்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நயன்தாரா..!

லேடி சூப்பர் ஸ்டார் என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலமாக தனக்கான தனி அடையாளத்தை பிடித்தார்.

மேலும், அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதன் முதலில் அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக பணியாற்றினார்.

நடிகை நயன்தாரா:

அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் அங்கு நடித்த பின்னர் தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார் .

அந்த திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். முதல் படமே அவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்து அடையாள படமாக மாறியது.

தொடர்ந்து இரண்டாவது ஆக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அவர் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதை அடுத்து சிவகாசி, வல்லவன், சிவாஜி, பில்லா, யாரடி நீ மோகினி ,வில்லு, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், கோவா, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அடுத்தடுத்த திரைப்படங்கள்:

மேலும், மாசிலாமணி, தனி ஒருவன், நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார் .

இதனிடையே பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் நடிகை நயன்தாரா தன்னுடைய ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார். தற்போது ஹிந்தி சினிமாவிலும் அதிக கவனத்தை செலுத்தி வரும் நயன்தாரா பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து அங்கு அதிக வசூல் ஈட்டி பெரும் சாதனை படைத்தது. இதை அடுத்து பாலிவுட் சினிமாவிலும் நட்சத்திர நடிகையாகி விட்டார் நயன்தாரா.

காதல்… திருமணம்… குழந்தை:

தொடர்ந்து இப்படி தென்னிந்தியா மற்றும் பாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்துவரும் நயன்தாராவுக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது.

முன்னதாக அவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

திருமணம்… குழந்தை பிறப்பிற்கு பிறகும் நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தன்னுடைய அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

படுக்கையில் பயம்:

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சில மாதங்களுக்கு முன்னர் டிடி உடன் கலந்துக்கொண்ட நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை நயன்தாரா, நான் எப்போவும் மல்லாந்து படுக்கவே மாட்டேன்.

அது எனக்கு மிகுந்த பயத்தை கொடுக்கும். அப்படி நேராக படுத்தாள் பேய் வந்து அமுக்கும் என எனக்கு யாரோ எப்போவோ சொல்லியிருக்காங்க.

அதனால் எப்பவும் ஒரு சைடா தான் படுப்பேன். அதே போல் லைட் ஆப் பண்ணிட்டு தூங்கவே மாட்டேன். எனக்கு பயமெல்லாம் இல்லை ஆனால், லைட்டா பயம் தான் என நயன்தாரா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version