ஒரு தேவதை வந்து விட்டால் என்னை தேடி என்று சொல்லக்கூடிய வகையில் பால்கனியில் நின்று பரவசப்படுத்தி இருக்கும் நயன்தாரா ( Nayanthara) கைகளைத் தட்டி அனைவரையும் குஷிப்படுத்தி விட்டார்.
இந்த போட்டோசை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் எதற்காக இவர் கைத்தட்டி இப்படி நிற்கிறார் என்ற கேள்வியை தங்களுக்குள் கேட்டபடியே கீழே ஒன்றும் போடாமல் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் என்று குறிப்பாக உணர்த்திருக்கிறார்கள்.
பார்க்கும்போதே ஏதேதோ உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் எந்த போட்டோ இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் கனவு தேசத்தில் தற்போது இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக திகழும் இவர் நம்பர் ஒன் நாயகி என்பதால் தான் இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.
திரைத் துறையில் பல வகைகளில் கிசுகிசுக்களில் அடிபட்ட போதும் தான் கொண்ட வேலையை சிரத்தையாக செய்ய வேண்டும் என்பதை மனதில் நிலை நிறுத்தி செயல்படுத்தியதனால் மட்டுமே இந்த அளவிற்கு இவர் உழைப்பால் உயர்ந்து நிற்கிறார்.
தன்னைப் பற்றி எழும் கிசுகிசுக்களுக்கு எந்த ஒரு பதிலும் தராமல் என் வழி தனி வழி என்பதை மெய்ப்பித்து காட்டியதால் தான் இன்று இவரை யாரும் அசைக்க முடியாமல் உயர்ந்து நிற்கிறார்.
தமிழில் ஐயா படத்தில் அறிமுகமான இவர் பில்லா படத்தின் மூலம் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்து விட்டார்.
இதனை அடுத்து திருமணம் ஆன பிறகும் பலவிதமான சர்ச்சைகள் சிக்கித் தவித்த இவர் வாடகை தாயார் மூலம் இரட்டைப் பிள்ளைகளுக்கு தாயானார். மேலும் தற்போது பல படங்களில் நடித்து வரக்கூடிய இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்.
இதனை அடுத்து இணையத்தில் வைரலாக மாறிவிட்ட இந்த போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது. மலையாள தேசத்து மங்கையான இவருக்கு தமிழிலும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.எனவே தான் இவரை இன்ஸ்டா பக்கத்தில் அதிக அளவு ஃபாலோர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.