ஸ்பாட்டுக்கு போனதும் பாலய்யாவின் இந்த உறுப்பை தொட்டுடனும்.. இல்லனா டார்ச்சர் பண்ணுவார்..!
தெலுங்கு சினிமாவில் தற்போதைய சர்ச்சைக்குரிய நடிகராக பார்க்கப்பட்டு வருபவர் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா.
இவரை பாலையா என அழைப்பதுண்டு. சமீபத்தில் இவர் நடிகை அஞ்சலியை மேடையில் பிடித்து இழுத்து தள்ளியது பெரும் விவகாரமாக பேசப்பட்டு வந்தது .
தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா:
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ஒரு நடிகையை இந்த அளவுக்கு இழிவுபடுத்துவது என என பலரும் அவரை விமர்சித்து இருந்தார்கள் .
இந்நிலையில் தற்போது பிரபல சர்ச்சைக்குரிய விமர்சகர் ஆனந்தகன் பேட்டி ஒன்றில் பாலையா குறித்த ஒரு ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் ஆன பாலைய்யா பிரபலமான நடிகர் அரசியல்வாதி என இருந்து வருகிறார்.
இவர் ஆந்திராவில் முதலமைச்சர் ஆக இருந்த என் டி இராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தனது குடும்பப் பின்னணியும் வாரிசு நட்சத்திர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
63 வயசிலும் அதிரடி ஹீரோவாக பாலைய்யா:
தற்போது 63 வயதாகும் இவர் இன்னும் ஹீரோவாகவும் கௌரவத் தோற்றத்திலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் ஒரு நொடி நேரத்திலேயே 100 பேரை அடித்து விரட்டுவார்.
அதிரடியான ஆக்சன் காட்சிகளில் நடித்து டோலிவுட் சினிமாவையே அலற விடுபவர் பாலையா. இவரது வயசுக்கு இவரது காட்சிக்கும் சம்பந்தமே இல்லாத வகையில் அதிரடியான சண்டை காட்சிகளை கூட அசால்ட்டாக நடித்து விடுவார்.
இவரது திரைப்படங்கள் வெளியானாலே டோலிவுட் சினிமாவில் மிகப் பெரிய அளவில் கலெக்ஷன்ஸ் அள்ளும். இதனால் இவர் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார்.
இதனிடையே அவ்வப்போது பெரும் சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் பாலைய்யா. அப்படித்தான் சமீபத்தில் கிருஷ்ணா சைதன்யா இயக்கத்தில் உருவாகியுள்ள கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற திரைப்படத்தின் அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக பாலைய்யா கலந்து கொண்டார்.
அப்போது அவர் நடந்துக் கொண்ட விதம் தான் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகினார்.
அஞ்சலியை பிடித்து தள்ளிய பாலைய்யா:
அதாவது அந்த மேடையில் நடிகை அஞ்சலி, நேஹா செட்டி ஆகியோர் ஒட்டுமொத்த படக்குழுவும் நின்று கொண்டிருந்த சமயத்தில் பாலையா அஞ்சலியை சற்று தள்ளி நிற்குமாறு கூறியிருக்கிறார் .
அதற்கு அஞ்சலி ஹீல்ஸ் போட்டுக் கொண்டிருந்ததால் மெதுவாக நகர்ந்து நின்றார். உடனே கடுப்பான பாலகிருஷ்ணா சட்டென அஞ்சலியை தள்ளிவிட்டார் .
இதனால் அவர் தட்டு தடுமாறி விழாமல் சமாளித்து நின்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்து சில நாட்களுக்கு முன்னர் வெளியாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும், பாலைய்யாவை பலரும் விமர்சித்து தள்ளியிருந்தார்கள். இந்த விஷயம் இப்படியாக இருந்த சமயத்தில் இது குறித்து பலரும் பாலைய்யாவின் மிக மோசமான குணம் இதுதான் என வெளிப்படையாக இதுவரை அவரைப் பற்றி வெளிவராத தகவல்களை எல்லாம் கூற துவங்கினார்கள் .
அப்படித்தான் தற்போது பிரபல சர்ச்சைக்குரிய விமர்சகர் அந்தகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாராவிடம் பாலைய்யா நடந்து கொண்ட விதத்தை பேசி அதிர வைத்திருக்கிறார்.
காலில் விழுந்த நயன்தாரா:
அதாவது, யாராக இருந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததும் பாலாவின் கால் கட்டை விரலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
அதை மட்டும் செய்து விட்டால் அவருடைய படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு டார்ச்சர் கொடுக்கவே மாட்டார். அவருக்கு நாம் மரியாதை கொடுக்கிறோம் மதிப்பு கொடுக்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்திவிட்டால் போதும்.
இதனை நடிகை நயன்தாரா தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு திரைப்படங்களில் பாலையாவுக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
ஒருமுறை கூட நயன்தாராவை எந்த விதத்திலும் டார்ச்சர் செய்தது கிடையாது பாலையா என்று ஊடக பிரபலம் அந்தணன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.