கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த தமிழ் சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு தேனிலவு கொண்டாட சென்றுள்ளார் அவர்கள் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக நயன்தாராவின் திருமணத்தை பற்றி பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின அவற்றை தன்னுடைய அனுபவ முதிர்ச்சியின் காரணமாக அழகாக முடித்து வைத்தார் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அவர்களுடைய நெருங்கிய உறவினர்களை அழைக்க வில்லை என்ற புகார் எழுந்தது பெரும் சர்ச்சையானது.
மறுபக்கம் திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதி தேவஸ்தானத்திற்கு தரிசனத்திற்காக சென்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காலில் செருப்பு அணிந்தபடியே தேவஸ்தான வளாகத்தில் நடந்து வந்ததாக சர்ச்சை கிளம்பியது.
இதனை தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட நீங்க நயன்தாரா எங்களை சுற்றி கூட்டம் இருந்ததாலும் அங்கிருந்து எப்படியாவது பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற பயத்தினாலும் காலில் செருப்பணிந்து அறிந்து இருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை.
வேண்டுமென்றே நாங்கள் அதனை செய்யவில்லை. எனவே, பக்தர்களும் பொதுமக்களும் எங்களை மன்னித்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளார்.
இதனால் இந்த விவகாரம் சற்று அடங்கியது நிலையில் தாய்லாந்துக்கு சென்றுள்ள நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அங்கேயே ரொமான்ஸ் செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது