கேரளத்து பைங்கிளியான லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய நயன்தாரா திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடிய இறைவன் என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மாட்டுப் பொங்கல் அன்று வெளியானது.
இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கக்கூடிய நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சக்கை போடு போட்டதோடு மட்டுமல்லாமல் வரலாறு காணாத வசூலையும் வாரி தந்தது.
மேலும் ஏற்கனவே இந்த ஜோடி இவரோடு இணைந்து நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இணைந்து நடித்த அந்த படம் மாஸ் வெற்றியை தந்தது தான் மீண்டும் தற்போது இவர்கள் அனைவரும் இணைந்து நடிக்கும் இறைவன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நடிகர் யார் என்பதை நீங்கள் யோசித்து விட்டீர்களா? அட.. ஆம் நீங்கள் நினைப்பது போல் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மனாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்த ஜெயம் ரவி தான்.
அவர் இந்த படத்தில் நடித்த பிறகு இவர் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியதாக கூறப்பட்ட நிலையில் புதிய கதைகளில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.
ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் தான் தனி ஒருவன் மாஸ் வெற்றிக்கு பிறகு இருவரும் இணைந்து இந்த படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லோக் சமீபத்தில் மாட்டுப் பொங்கல் அன்று வெளியாகி விட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து வைத்திருக்கும் பட குழு விரைவில் இந்த படம் நயன்தாரா மற்றும் ஜெயம் ரவிக்கு வித்தியாசமான உருவங்களை வழங்கி இருக்கிறது என்ற ரீதியில் பேச வைக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் இருவருமே வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடிப்பதில் அலாதி பிரியர்கள். எனவே இந்த படம் கடுமையான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் நடிகர்களின் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.
ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் உருவாகக்கூடிய இறைவன் படத்திற்கு மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். மேலும் இந்த படத்தை ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.