Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

முதன் முறையாக சிம்புவுடன் தான் அது நடந்துச்சு.. நயன்தாரா ஓப்பன் டாக்..!

பாரதியார் பாடல்களில் கேரளத்து பெண் அழகு என்று சொல்லி இருப்பார். அப்படி கேரளாவில் இருந்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகை நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய நயன்தாரா ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் சற்று கவர்ச்சியை காட்டி நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாரா..

தமிழ் திரை உலகப் பொருத்த வரை இவர் ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.மேலும் தமிழில் இவரது முதல் திரைப்படம் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து நடித்த ஐயா திரைப்படம் தான்.

இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த புதிதில் முதன் முதலாக நடிகர் சிம்பு படத்தில் தான் நடிக்க இருந்தார்.  வி ஜெட் துரை இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளி வந்த தொட்டி ஜெயா திரைப்படத்தில் கோபிகா நடித்திருந்த கேரக்டர் ரோலை தான் நயன்தாரா செய்வதாக இருந்தது.

எனினும் இந்தப் படத்தின் ஆடிஷனில் நயன்தாரா சரியாக நடிக்காததால் உனக்கெல்லாம் நடிப்பு செட்டாகாது கிளம்பு என்று இயக்குனர் அவரை வெளியே அனுப்பி விட்டாராம்.

அதன் பிறகு தான் நயன்தாராவிற்கு சரத்குமாரின் ஐயா படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து இன்று தனக்கு என்று ஒரு தனி இடத்தை திரைகளுக்கு பிடித்திருக்கும் நயன்தாரா மிகச்சிறந்த தொழில் அதிபராகவும் வலம் வருகிறார்.

முதல் முதலில் சிம்புவுடன் இதுதான் நடந்தது..

இந்த விஷயத்தை தான் முதல் முதலில் சிம்புவுடன் இதுதான் நடந்தது என்று நயன்தாரா ஓப்பனாக தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படம் போதிய வெற்றியை தரவில்லை என்றாலும் விரைவில் வெற்றி படத்தை தருவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி வரக் கூடிய நயன்தாரா தமிழில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதோடு அந்த படங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

நயன்தாரா ஓப்பன் டாக்..

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஐயா படத்தில் நடிப்பதற்கு முன்பே சிம்பு படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பு கைநழுவி போன விஷயத்தை அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வருவதோடு இந்த விஷயத்தை பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

ஒரு சமயம் கோபிகாவிற்கு பதிலாக நயன்தாரா இந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை தட்டி விட்டிருக்கும் ரசிகர்கள் ஆரம்பத்தில் பட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கும் நயனின் தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.

அத்தோடு நம்பிக்கை இல்லாமல் இருக்கும் ரசிகர்கள் நயனின் இந்த வளர்ச்சியை பார்த்து மனம் தளராமல் அவர்கள் வாழ்க்கையில் முதல் தோல்வி ஏற்பட்டாலும் அதைப் பற்றி சிந்திக்காமல் அடுத்து வெற்றி பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசித்து அதற்கான உழைப்பை போடும் போது நிச்சயம் வெற்றி இலக்கை அடைக்கலாம் என சொல்லி வருகிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version