நயன்தாராவா இது..? என்னமா இதெல்லாம்.. ரெண்டு புள்ளைக்கு அம்மா பண்ற வேலையா இது..?

நயன்தாராவா இது..? என்னமா இதெல்லாம்.. ரெண்டு புள்ளைக்கு அம்மா பண்ற வேலையா இது..?

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. ஆரம்ப காலகட்டங்களில் நடிகை நயன்தாரா அதிக கவர்ச்சி காட்டி நடித்து வந்தாலும் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கியது முதலே கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

தொடர்ந்து அவரை எந்த திரைப்படத்தில் பார்த்தாலும் டீசண்டாக தான் நடித்திருப்பார். அண்ணாத்த, விசுவாசம், காத்து வாக்குல ரெண்டு காதல் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் தொடர்ந்து மிகவும் டீசன்டாக அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் சம்பளத்திற்காக மீண்டும் அவர் கவர்ச்சியில் இறங்க உள்ளதாக பேச்சுக்கள் அடிப்பட துவங்கியிருக்கின்றன அதிலும் முக்கியமாக வெப் சீரிஸ்களின் மீது அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஏனெனில் வெப் சீரிஸ்களில் எவ்வளவு கவர்ச்சியாக நடித்தாலும் அதற்கு சென்சார் சர்டிபிகேட் என்பதே கிடையாது என்பதால் எந்தவித தடையும் இல்லாமல் அவை வெளியாகின்றன.

தயாரிப்பாளராக தோல்வி:

இதற்கு முன்பு திரைப்படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா. தன்னுடைய தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக இருந்த திரைப்படம் ட்ராப் ஆனது.

நயன்தாராவா இது..? என்னமா இதெல்லாம்.. ரெண்டு புள்ளைக்கு அம்மா பண்ற வேலையா இது..?

ஆனால் இதற்காக சில பல கோடிகளை செலவு செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா. போட்ட பணம் அனைத்தும் நஷ்டம் என்ற நிலையில் மீண்டும் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். இந்நிலையில், தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை நயன்தாரா என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மொத்தம் 9 எபிசோடுகளாக உருவாகும் இந்த வெப் சீரிஸில் நடிகை நயன்தாரா காவல்துறை அதிகாரியாகவும், கேங்ஸ்டராகவும் என இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் திரைப்படங்களில் இல்லாத அளவுக்கு படு கிளாமரான காட்சிகளில் நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை நயன்தாரா என்று கூறப்படுகிறது.

கவர்ச்சியாக ரீ எண்ட்ரி:

சமீப காலமாக நயன்தாரா கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் இவருக்கு கவர்ச்சி குறையவில்லை என்று கருத்துக்களை கூறி வந்தனர்.

நயன்தாராவா இது..? என்னமா இதெல்லாம்.. ரெண்டு புள்ளைக்கு அம்மா பண்ற வேலையா இது..?

அதற்கு ஏற்றாற் போல தற்போது வெப் சீரிஸில் ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை நயன்தாரா. இந்த வெப்சீரிஸில் சூடான படுக்கை அறை காட்சிகள் மற்றும் கிளாமரான காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஹிந்தியிலும் நடிகை நயன்தாராவுக்கு மார்க்கெட் உருவாகி இருப்பதால் இந்த சீரியஸிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என தெரிகிறது.

படுக்கையறை காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள நடிகை நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் என்னம்மா இதெல்லாம் ரெண்டு பிள்ளைக்கு அம்மா செய்யுற வேலையா இது..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.