Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

இந்த வயசுல பேசுற பேச்சா இது..? நேரா படுத்தால்.. அவங்களுக்கு ஈஸியா இருக்கும்.. நயன்தாரா பேச்சு..!

மலையாள பேரழகியான நடிகை நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்த தோடு மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ் திரையுலகில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஒரு இணைந்து ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல் வரிகளுக்கு நளினமான  நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

நடிகை நயன்தாரா..

நடிகை நயன்தாராவின் சிறப்பான நடிப்பை பார்த்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. அந்த வகையில் தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் தற்போது பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளில் அதிக அளவு நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமாவில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே சிம்பு, பிரபு தேவா போன்ற பல நடிகர்களோடு இணைந்து கிசுகிசுக்கப்பட்ட இவர் நீண்ட நாள் காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது வாடகை தாயின் மூலம் பெற்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயாராக மாறி இருக்கும் இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து தொழில் அதிபராகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த அன்னபூர்ணி திரைப்படம் சொல்லிக் கொள்ளக் கூடிய வெற்றியை தராத நிலையில் இவர் கட்டாயம் வெற்றி ஒன்றை கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் மற்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நேர படுத்த ஈஸியா இருக்கும்..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்க கூடிய நயன்தாரா அண்மையில் அந்திமழை என்ற சேனலுக்கு பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். இந்த பேட்டியில் விஜய் டிவி புகழ் டிடி இவரிடம் கேள்விகளை கேட்டிருந்தார்.

அந்தக் கேள்வியில் டிடி பேசும் போது புளிய மரத்தில் பேய் உள்ளது என்று சொல்லுவார்கள். அது போல யாருக்கும் தெரியாத ஒன்று உங்களுக்குத் தெரிந்தால் எங்களுக்கு பகிர்ந்து விடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

இந்த வயசுல பேசுற பேச்சா..

அதற்கு நயன்தாரா தந்த பதிலானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் இந்த வயசுல பேசுற பேச்சா இது என்று கேட்கத் தூண்டியுள்ளது.

 இதற்கு காரணம் இதற்கு பதிலளித்து பேசும் போது பொதுவா எனக்கு நேர படுத்தா அதாவது ஸ்ட்ரெயிட்டா படுத்தா அவங்களுக்கு ஈசியா இருக்கும் என்று நான் அப்படி படுக்கிறதே கிடையாது என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்.

மேலும் தூங்கும் போது பயமில்லை எனினும் லைட்டை அணைக்காமல் தான் தூங்குவேன் என்று சிரித்த படி தந்த பதிலை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

என்னம்மா லேடி சூப்பர் ஸ்டாரே இப்படியா? உங்களுக்கும் அது மாதிரியான பயம் இருக்கா? என்ற கேள்விகளை முன் வைத்து இருப்பதோடு அவர் கூறிய பதிலை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து எந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version