தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் பெருவாரியான படங்களில் முன்னணி நாயகர்ளோடு இணைந்து நடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அசைக்க முடியாத பட்டத்தை பெற்றிருக்கும் நடிகை நயன்தாரா தற்போது தல ஆஜித் திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பார்த்திருக்கிறார்.
மேலும் தென்னிந்திய மொழிகளிலேயே அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கக்கூடியவர் பல கிசுகிசுகளுக்கு ஆளான நிலையில் தற்போது ஏழு எட்டு வருடங்களாக விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
திருமணமான மூன்று நான்கு மாதங்களிலேயே வாடகை தாயின் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுக் கொண்டு மீண்டும் சர்ச்சைக்கு உள்ளான நடிகைகளின் வரிசையில் இவர் முதல் இடத்தில் இருந்து வந்தார்.
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அஜித் நடித்த துணிவு படத்தை பார்ப்பதற்காக சென்னையில் இருக்கக்கூடிய திரையரங்கிற்கு சென்றுயிருக்கிறார்.
பொங்கலுக்கு மக்களுக்கு விருந்தாக வந்திருக்கும் தல மற்றும் தளபதியின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோகமாக பேசப்பட்டு வரும் நிலையில் அஜித்தின் துணிவு படத்தை வினோத் இயக்கியிருக்கிறார்.
இந்த இரண்டு படங்களும் ஜனவரி 11-ம் தேதி வெளியானதை அடுத்து பெருவாரியான ரசிகர்கள் அனைவரும் எந்த படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.
நடிகை நயன்தாராவும் அஜித்துடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் அஜித் ரசிகர்களோடு இணைந்து சென்னையில் சத்யம் திரையரங்கில் இரவு நேர காட்சியை கணவனோடு சேர்ந்து பார்த்து ரசித்திருக்கிறார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைவலாக பரவி வருகிறது. ஏற்கனவே அஜித்தோடு இணைந்து ஏகன், பில்லா, ஆரம்பம் விசுவாசம் போன்ற படங்களில் நடித்தவர்.
இதனை அடுத்து கணவர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள படத்தில் அஜித் அடுத்ததாக ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்ற வேளையில் இருவரும் இணைந்து எந்த படத்தை பார்த்த பதிவை பதிவேற்றி இருக்கிறார்கள்.
மேலும் இந்த படம் பிளாக் பஸ்டர் மூவியாக அமையும் என்று அவர் கூறி இருப்பதோடு பட குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.