நயன்தாரா-விற்கு எப்படி குழந்தை பிறந்தது..? – ரசிகர்களின் குழப்பதிற்கு விடை இதோ..! முழு விபரம்..!

நடிகை நயன்தாரா விற்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள்.. கல்யாணம் என்ற பெயரில் வளைகாப்பு நடத்தினீர்களா..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

என்ன செய்தாலும் அதனை கலாய்க்க என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் அவர்களுடன் சேர்ந்து நாமும் சிரித்து விட்டு கடந்து விடுவோம்.

ஆனால் இப்பொழுது விஷயம் என்னவென்றால் இவர்களுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பதுதான். விசாரித்த வகையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் உயிரணுக்கள் கரு முட்டையாக மாற்றப்பட்டு அதன் பிறகு வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் வைக்கப்பட்டு குழந்தை வளர்ந்து இருக்கிறது.

அந்த குழந்தை தற்போது பிறந்து இருக்கிறது. அதுவும் இரட்டை குழந்தைகளாக பிறந்திருக்கிறது. நடிகை நயன்தாராவால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது அப்படியே முடிந்தாலும் அவர் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் வாடகை தாய் மூலமாகத்தான் குழந்தை பெற்றுக்கொள்வார் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. அதனை நிரூபிக்கும் விதமாக நடிகை நயன்தாரா தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

எப்படி வேறு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்ந்த குழந்தை இவர்களுடைய குழந்தை ஆகும்..?

எப்படி வேறு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்ந்த குழந்தை இவர்களுடைய குழந்தை ஆகும்..? என்று நீங்கள் கேட்கலாம். உயிரியல் முறைப்படி நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரது குழந்தைகள் தான் இந்த குழந்தைகள்.  கரு உருவாவனது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் உயிரணுக்கள் மூலமாகத்தான்.

குழந்தை வளர்ந்தது மட்டும்தான் இன்னொரு தாயின் வயிற்றில். எனவே உயிரியல் முறைப்படி இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் இந்த குழந்தைகளுக்கு பெற்றோர் என்பது உண்மை. சட்டப்படி இவர்கள் இருவரும் இந்த குழந்தைகளுக்கு பெற்றோர் என அங்கீகரிக்கப்படுவார்கள்.

அதாவது ஒரு குழந்தை உருவாக தேவையான அனைத்து உயிரணுக்களையும் கணவன்-மனைவியால் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் மனைவியால் அந்தக் கருவை சுமந்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற சூழ்நிலை வரும்போது இந்த வழியை உபயோகப்படுத்தலாம்.

இன்றைய மருத்துவ உலகில் இது போன்ற விஷயங்களை கேலியாக.. கிண்டலாக பார்ப்பது என்பது மிகவும் ஒரு வேதனைக்குரிய விஷயம். இது இப்போதுதான் மக்கள் மத்தியில் பரவலாக ஒரு அறியப்படும் விஷயமாக மாறி வருகிறது.

எனவே இந்த விஷயங்களை பக்குவத்துடன் அணுகுவது மிகவும் அவசியம். இணைய வட்டாரங்களில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கொச்சைப்படுத்தும் விதமான கருத்துக்களையும் பார்க்க முடிகிறது. ஆனால் அவற்றுக்கு எதுவுமே முகாந்திரம் கூட கிடையாது.

காரணம் இந்த குழந்தைகளுக்கு முழுக்க முழுக்க நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனும் தான் பெற்றோர்கள் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டிருக்கும் கூடிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவிப்பது தான் சரியான விஷயமாக இருக்கும்.

பிள்ளையார் சுழி போட்ட பிரியங்கா சோப்ரா..

இதேபோல பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் ஆகியோர் தங்களுடைய உயிரணுக்கள் மூலம் கருவை உருவாக்கி அதனை வேறு ஒரு தாயின் வயிற்றில் வைத்து வளர்த்து குழந்தையை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த குழந்தைக்கு இவர்கள்தான் பெற்றோர் என்று அந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரித்து இருக்கின்றது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இதற்கான பல்வேறு முயற்சிகளில் ஏற்கனவே ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றும் கருவை உருவாக்கி அது வேறு ஒரு தாயின் வயிற்றில் வளர தொடங்கி ஐந்து மாதங்கள் கழித்து தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …