நீலிமா ராணி : இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னும் அள்ளும் அழகில் ரசிகர்களை அசர வைத்திருக்கிறார் சின்னத்திரை சீரியல் நடிகையான நீலிமா ராணி. சின்னத்திரையில் நடித்ததோடு மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பிரகாசமாக வெளிவந்தவர் தான் நீலிமா கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார்.
இதனை அடுத்து தமிழில் இவர் மொழி, தான், நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். ஹீரோயினியாக வெள்ளித்தறையில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன சீரியல்களில் தொடர்ந்து இல்லத்தரசிகளின் இதயத்தில் குடி புகக் கூடிய கேரைக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பில் அசத்தி வந்தார்.
சீரியலில் ஹீரோயினியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் தனது நடிப்புத் திறனை வெகு நேர்த்தியாக வெளியிட்டு இருக்கிறார். இதுவரை இவர் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது தனது குழந்தைகளை திறம்பட வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீரியலை விட்டு விலகியை இவர் தற்போது குழந்தைகளோடு நேரத்தை செலவிட்டு குழந்தை வளர்ப்பில் பிஸியாக இருக்கிறார்.
அவ்வப்போது தான் குழந்தைகளோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளோடு பார்க், பீச், கோயில் என்று குடும்பத்தோடு வெளியே சென்று குதூகலமாய் இருக்கிறார்.
இந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் இரண்டு குழந்தைகளும் அழகாக வளர்ந்த நிலையில் இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் குழந்தைகள் வளர்ந்து விட்டார்களே எப்போது சீரியல் நடிக்க வருவீர்கள் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இரண்டு குழந்தைகளும் பார்ப்பதற்கு தேவதை போல அழகாக இருக்கிறார்கள். இவர்களையும் எப்போது களத்தில் இறக்குவீர்கள் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்கள்.