நீலிமா தேவி தமிழ் திரை உலகில் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் டும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார்.
இவரின் சிறந்த நடிப்பை பார்த்து மேலும் பட வாய்ப்புகள் வந்து சேர்த்து. அந்த வகையில் நான் மகனல்ல, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் சில முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
நடிகை நீலிமா ராணி..
சினிமாவில் நடிப்பதோடு சின்ன திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த இவர் செல்லமே, வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து தமிழக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்தார்.
சமூக வலைதளங்களில் எப்போதுமே வித்தியாசமான போட்டோ சூட்டை நடத்தி வரும் இவர்
ரசிகர்களுக்காகவும் ரசிகர்களோடு எப்போதும் ஒரு டெச்சில் இருக்க வேண்டும் என நினைப்பார்.
“செ** எந்த பொசிஷன்” கேள்வி எழுப்பிய ரசிகர்..
நீலிமா ராணி வெள்ளித்திரை சின்னத்திரை என்ற இரண்டிலும் பிஸியாக இருக்கும் போதே தன்னைவிட 11 வயது மூத்தவரான இசைவாணர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இது குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது.
எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் காதலித்து வந்த நபரோடு நேர்த்தியான முறையில் குடும்பம் நடத்தி வந்த இவர் இரு குழந்தைகளுக்கு தாயான பின்பு மீண்டும் நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதனை அடுத்து இவர் ஆகஸ்ட் 16, 1947 ருத்ரன் போன்ற படங்கள் நடித்து மீண்டும் ரீஎன்றி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவ் ஆக இருக்கக்கூடிய இவரிடம் ரசிகர் ஒருவர் தேவையில்லாத கேள்வியை கேட்டிருக்கிறார்.
அந்தக் கேள்வியில் அவர் உங்களுக்கு உடலுறவில் எந்த பொசிஷன் பிடிக்கும். ஒரு மாதத்திற்கு எத்தனை முறை என்று படு கேவலமான கேள்வியை கேட்டிருப்பது பார்த்து நீலிமா ராணி காண்டாகிவிட்டார்.
கடுப்பாகி பதிலடி தந்த நீலிமா ராணி..
இதனை அடுத்து அந்த ரசிகருக்கு நீலிமா ராணி தக்க பதிலடி கொடுத்ததோடு அறிவு கெட்டவனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை என்று கோபத்தோடு செருப்படி பதில் கொடுத்திருக்கிறார்.
இதற்கு பலரும் நீலிமா தேவிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இதுபோன்ற விஷயங்களை கேட்பது தவறு என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள். இவர்களுக்கு அறிவே இல்லையா என்ற கேள்விகளை விடுத்து இருப்பதோடு நீலிமா ராணிக்கு பக்கபலமாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.