Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

“மேலாடை இல்லாமல் வீடியோ காட்சி..” எனக்கு ஒரு விஷயமாவே தெரியல.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடிகையாக வலம் வந்த நடிகை நீலிமா ராணி 1992 ஆம் ஆண்டு வெளி வந்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்த நடித்திருப்பதோடு சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை நீலிமா ராணி..

நீலிமா ராணி ஐம்பதற்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அந்த வகையில் நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருதினை வென்றவர்.

மேலும் இவர் சின்னத்திரை நடிப்பில் இருந்து சற்று விலகி அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருந்தாலும் சீரியல்களில் ஜொலித்தது போல வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியவில்லை.

மேலும் சின்ன திரையில் இவர் நடித்த சீரியல்களில் மெட்டி ஒலி, கோலங்கள், புதுமைப் பெண்கள், தென்றல், செல்லமே போன்ற தொடர்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்து உள்ளது என்றால் பாருங்களேன்.

மேலாடை இல்லாமல் வீடியோ காட்சி..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நீலிமாதேவி அடிக்கடி தன் குடும்பத்தோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுத்திவிடுவார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை நீலிமா ராணி பேசும் போது பெண்கள் மேலாடை அணியாமல் இருப்பது பற்றி சில கேள்விகள் எழுப்பப்பட்டது.

 அந்த கேள்விகளுக்கு பொறுமையாகவும் நிதானமாகவும் விளக்கமாகவும் பதில் அளித்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.

பொதுவாக அந்த காலத்தில் பெண்கள் யாரும் மேலாடை அணியாமல் இருந்திருக்கிறார்கள். அது போன்ற காட்சிகளை படமாக்கக்கூடிய சமயத்தில் இயக்குனர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை உள்வாங்கிக் கொண்டு நீங்கள் செய்தீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் கேள்விக்கு பதில் அளித்த போது அவர் நடிப்புத் துறைக்கு வந்துவிட்டால் நாம் ஒரு கலைஞராக மாறிவிடுகிறோம். மேலும் அந்த சமயத்தில் திரைப்படங்களுக்கு எது தேவையோ அதை நான் கொடுப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை என்று சொன்னார்.

அத்துடன் அந்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது மேலாடை இல்லாமல் நடிக்க கூடிய காட்சியை பற்றி நான் நினைத்து பார்க்கவில்லை. ஏனென்றால் அந்த சமயத்தை தான் எனக்கு குழந்தை பிறந்திருந்தது.

எனக்கு ஒரு விஷயமாகவே தெரியல.. ஓப்பன் டாக்..

இதனையடுத்து எனக்கு அது போன்ற ஒரு விஷயம் ஒரு விஷயமாகவே தெரியவில்லை என்று ஓபனாக பேசி இருப்பதை பார்த்து அனைவரும் அசந்து போய் விட்டார்கள்.

தற்போது இந்த விஷயத்தை பற்றி இணையங்களில் பேசி வரக்கூடிய இணையதள வாசிகள் இந்த விஷயம் பற்றி தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பேசப்படும் பேசும் பொருளாக மாறிவிட்டது.

நீங்களும் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் நீலிமா ராணி ஓபன் ஆக சொன்ன இந்த விஷயத்தை உங்கள் நண்பர்களோடும் ஷேர் செய்து கொள்ளலாம்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version