நீச்சல் உடையில்.. முன்னணி சீரியல் நடிகை..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடிய கல்யாணப்பரிசு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நேகா கவுடா.

இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் என்ற தொடரில் நடித்து வருகின்றார் குணவதி எனும் கதாபாத்திரத்தில் ரவுடிபேபி ஆக வளம் வந்து கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் தன்னுடைய ப்ரி.கே.ஜி காதலைப் பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நாங்கள் பள்ளிப்பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்தோம் ஒருவர் மீது ஒருவர் காதல் இருந்தாலும் அதனை படிப்பு முடியும் வரை வெளிப்படுத்திக் கொண்டது கிடையாது.

தற்போது தான் அதாவது திருமணத்திற்கு பிறகு தான் எங்களுடைய ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப் ஆரம்பமானது. இப்பொழுது வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு கோபம் அவ்வளவா வராது. ஏனென்றால் எனக்கு வந்தால் வார்த்தையே வராது.

கணவருடன் சேர்ந்து பல நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது இதய ட்ராவல் பண்ண வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கடற்கரையில் நீச்சல் உடையில் தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளியுள்ளார் அம்மணி.