Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

கார் சீட் கவரில் ட்ரெஸ்.. உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்.. மிரண்டு போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தவறான கதைகளை தேர்ந்தெடுத்து காணாமல் போன ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். திரைப்பட நடிகைகளை பொருத்தவரை அவர்களது முதல் திரைப்படம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றை என்று கூறலாம்.

தங்களை அந்த படத்தில் எப்படி காட்டிக் கொள்கிறார்களோ பிறகு மக்கள் அவர்களை அப்படியேதான் பார்ப்பார்கள். உதாரணத்திற்கு நடிகை சினேகா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் போது அவரை ஒரு குடும்பப் பெண்ணாக காட்டிக் கொண்டார்.

அதனை தொடர்ந்து இப்போது வரை ரசிகர்கள் அவரை அப்படித்தான் பார்த்து வருகிறார்கள் ஆனால் யாஷிகா ஆனந்தை பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகும் பொழுதே இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற படம் மூலமாக கவர்ச்சியான ஒரு நடிகையாக தன்னை காட்டிக் கொண்டு வந்தார்.

கதையால் வந்த வினை:

அதுவும் சில்க்ஸ்மிதா போன்ற கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கான ஒரு தவறான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிகையாக அறிமுகமானார் அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் கதைகளங்கள் எல்லாமே பெரிதாக வெற்றி பெறாத கதைகளாகவே இருந்தன.

பெரும்பாலும் ஆரம்ப இயக்குனர்கள் இயக்கும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களில்தான் யாஷிகா ஆனந்திற்க்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தன. பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் எந்த ஒரு கதாபாத்திரமும் இவருக்கு கிடைக்கவில்லை.

இதற்கு அவரது முதல் திரைப்படம்தான் காரணமாக இருந்தது. அந்த தவறான பிம்பத்தின் காரணமாக எந்த ஒரு பெரிய இயக்குனரும் அவரை தங்கள் திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கு யோசிக்க துவங்கினர்.

தொடர்ந்து விடாமுயற்சி:

இருந்தாலும் விடாமுயற்சியாக யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆவதற்கு பல வழிகளை முயற்சி செய்து வருகிறார். தமிழில் அதிக மக்களிடம் பிரபலம் ஆவதற்கான முக்கிய நிகழ்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் யாஷிகா ஆனந்த்.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் கூட அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை இருந்தாலும் ஜோம்பி, லெஜன்ட் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கு யாஷிகா ஆனந்த் செய்து வரும் ஒரே விஷயம் அடிக்கடி அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள்தான்.

இந்த புகைப்படங்களுக்கு மட்டும் ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அவர் ஒரு புகைப்படம் வெளியிடுகிறார் என்றாலே அதற்கு அதிகமான லைக் குவிவதை பார்க்க முடியும் இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்சமயம் வைரல் ஆகி வருகின்றன.

Continue Reading

More in Actress

Trending

To Top
Exit mobile version