“காமாட்சி விளக்கு வழிபாடு செய்யுங்க..!”- நினைத்ததை எல்லாம் அள்ளுங்க..!!

காமாட்சி விளக்கு வழிபாடு : வள்ளலார் பெருந்தகை ஜோதி வழிபாட்டை பற்றிய கருத்துக்களை அதிகளவு பகிர்ந்து இருக்கிறார். அப்படிப்பட்ட மங்களகரமான இந்த ஜோதி வழிபாட்டை ஆரம்ப நாட்களிலேயே நமது முன்னோர்கள் தீபத்தின் மூலம் வழிபட்டு இருக்கிறார்கள்.

 தீபத்தில் எண்ணற்ற வகைகள் இருந்தாலும் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் காமாட்சி விளக்கை வைத்து வழிபாடு செய்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் வந்து சேரும்.

Kamatchi lamp

அப்படிப்பட்ட காமாட்சி அம்மன் தீபத்தை எப்படி நீங்கள் வழிபாடு செய்வதின் மூலம் எண்ணற்ற பலன்களை அடைக்கலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

காமாட்சி அம்மன் தீபத்தை ஏற்றி வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்

குடும்பத்தில் பலவிதமான தீர்க்க முடியாத பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் ஆன்மீக ரீதியாக இந்த காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடுவதின் மூலம் தீராத பிரச்சனைகள் தீரும் என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்காக நீங்கள் தொடர்ந்து 48 நாட்கள் எந்த தீபத்தை ஏற்றி மனதார வழிபட்டால் போதும் நிச்சயம் உங்களது பிரச்சனைகள் தீர்ந்து விடும்.குறிப்பாக கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்கள் இந்த தீபத்தை ஏற்றி 48 நாட்கள் வழிபட தீராத கடன் தீரும் என்று கூறுகிறார்கள்.

Kamatchi lamp

மேலும் இந்த விளக்கை நீங்கள் தினமும் பிரம்ம முகூர்த்த வேலையில் குளித்து சுத்தமாக பூஜை அறையையும், சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து சுவாமியின் முன் அரிசி மாவில் கோலம் போட்டு அதில் ஒரு தட்டத்தை வைத்து இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.

விளக்கை ஏற்றும் போது நீங்கள் நெய் தீபமாக ஏற்றி வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வந்து உங்கள் வீட்டுக் கடன் சுமை நீங்குவதோடு செல்வ செழிப்பும் ஏற்படும்.

Kamatchi lamp

பூஜையை துவங்கும் முன் உங்கள் குல தெய்வத்தையும், காமாட்சி அம்மனையும் 10 நிமிடங்கள் மனதார வேண்டிக் கொண்டு அதன் பிறகு விளக்கை ஏற்றி வைத்து நீங்கள் உங்கள் கோரிக்கையை வைத்து உங்களுக்குத் தெரிந்த மந்திரங்களை கடவுளின் முன் கூறி வாருங்கள். கட்டாயம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

காமாட்சி அம்மன் தீபத்தை ஏற்றுவதால் உங்கள் வீட்டில் குலம் தழைக்கும். கிரக தோஷங்கள் நீங்கி, வறுமை ஒழியும். வழக்குகள் வெற்றியடையும் வீட்டுக்கு மங்கலம் உண்டாகும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …