தமிழில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூமி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நிதி அகர்வால் அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவரது அழகை பார்த்த ரசிகர்கள் சிலர் இவருக்கு கோயில் கட்டி பரபரப்பை கிளப்பினார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு யாருப்பா அது நிதி அகர்வால் என்று தேடினார்கள் ஏனைய ரசிகர்கள்.
அந்த அளவிற்கு இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை சுதாரித்துக் கொண்டார் நடிகை நிதி அகர்வால் இப்படியான காரியங்களில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம். நான் இப்பொழுதுதான் திரைத்துறைக்கு வந்து உள்ளேன். ஆரம்பத்திலேயே இப்படி எல்லாம் நீங்கள் செய்வது என்னுடைய சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்று நினைக்கிறேன்.
இப்படியான விஷயங்களை செய்வதை விட்டுவிட்டு படிப்பிற்காக கஷ்டப்படும் குழந்தைகளுக்கு செலவு செய்யுங்கள் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். மேலும் தனக்காக கோயில் கட்டிய ரசிகர்களை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு அறிவுரை கொடுத்து அனுப்பினார்.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி என படங்களில் நடித்து வரும் நிதி அகர்வால் கோக்கு மாக்கான விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் வெளிநாட்டு மதுபானம் ஒன்றின் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்த இவர் அதனை தொடர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்து இருந்தார்.
ஆனால் அந்த விளம்பரத்தில் இவர் பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின. அதாவது பெண்களுக்கு இப்படியான ஆணுறைகள் தான் மிகவும் பிடிக்கும் என்பதில் ஆரம்பித்து சில ரகசியமான விஷயங்களை பொதுவெளியில் பட்டாசாக வெடித்து தள்ளினார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் முண்டா பனியன் போன்ற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.