பயன்படுத்திய ஆணுறையை இதை பண்ணுங்க... நடிகை நிதி அகர்வால் ஓப்பன் டாக்..!

பயன்படுத்திய ஆணுறையை இதை பண்ணுங்க… நடிகை நிதி அகர்வால் ஓப்பன் டாக்..!

தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமான நடிகையாக நிதி அகர்வால் இருந்து வருகிறார். பெரும்பாலும் ஒன்றிரண்டு திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் இவ்வளவு ரசிகர்கள் இருக்க மாட்டார்கள்.

ஆனால் நிதி அகர்வாலை பொறுத்தவரை அவர் தமிழில் மொத்தமே மூன்று திரைப்படங்களில்தான் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கான ரசிகர் பட்டாளம் என்பதை மிக அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவரது அழகுதான் என்று கூற வேண்டும்.

தெலுங்கில் வரவேற்பு:

பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் நிதி அகர்வாலுக்கு தெலுங்கு சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் முதன்முதலாக ஹிந்தியில் வந்த முன்னா மைக்கேல் என்கிற திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

பயன்படுத்திய ஆணுறையை இதை பண்ணுங்க... நடிகை நிதி அகர்வால் ஓப்பன் டாக்..!

இந்த திரைப்படம் 2017 இல் வெளியானது. அதற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். தெலுங்கு சினிமாவில் வரிசையாக இரண்டு திரைப்படங்களில் நடித்து அதன் மூலமாக அதிக வரவேற்பை பெற்றார் நிதி அகர்வால்.

தொடர்ந்து ஐ ஸ்மார்ட் ஷங்கர் என்கிற திரைப்படம் இவரது நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் எக்கச்சக்க கவர்ச்சியில் நடித்திருந்தார் நிதி அகர்வால். இவரது கவர்ச்சியை கண்டு தெலுங்கு ரசிகர்கள் பெரும்பாலானோர் இவருக்கு ரசிகராக மாறினர்.

சிம்பு படத்தில் வாய்ப்பு:

அதனை தொடர்ந்து தமிழில் சிம்பு கதாநாயகனாக நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் பூங்கொடி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அந்த படத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியது. தொடர்ந்து உதயநிதி கதாநாயகனாக நடித்த கலக தலைவன் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

பயன்படுத்திய ஆணுறையை இதை பண்ணுங்க... நடிகை நிதி அகர்வால் ஓப்பன் டாக்..!

 அதற்குப் பிறகு இவரது நடிப்பில் தமிழில் இன்னும் படங்கள் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு ஆணுறை விளம்பரத்தில் நடித்திருந்தது அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட ஆணுறை குறித்து இவர் பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது ஆணுறையை பயன்படுத்திய பிறகு என்ன செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். பயன்படுத்திய ஆணுறைகளை வெட்டவெளியில் வீசுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

பயன்படுத்திய ஆணுறையை அதனுடைய வாய்ப்பகுதியை முடிச்சு போட்டு கட்ட வேண்டும். அதன் பிறகு காகிதத்தில் போட்டு சுற்றி குப்பை தொட்டியில் போட வேண்டும். பொதுவெளியில் அவற்றை போடுவதால் குழந்தைகள், விலங்குகள் போன்ற யாருக்காவது அது பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும் அவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயமும் உண்டு எனவே பயன்படுத்தியே ஆணுறையை பக்குவமாக அகற்றுவது நமது கடமை என்று கூறி இருக்கிறார் நிதி அகர்வால். இதுதான் இப்பொழுது பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.