Uncategorized
” காசிமா நகர் காவல் தெய்வம் கால பைரவர்..!” நன்மை பல பெற கால பைரவ வழிபாடு…!!
சிவபெருமானின் 64 அவதாரங்களில் ஒன்றாக கூறப்படும் இந்த கால பைரவர் பற்றி அதிகமாக பலருக்கு தெரியாது. இந்த கால பைரவரை வணங்கி முடித்தால் தான் காசி யாத்திரையே நிறைவு பெறும் என்று கூறுகிறார்கள். அந்த அளவு சிவபெருமானுக்கு நிகரான ஆற்றல் படைத்த கால பைரவரை எப்படி எல்லாம் வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
அந்தகாசுரனை அழிப்பதற்காக கால பைரவ அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகிறது. இந்த அவதாரத்தை எடுத்தவர் நம் சிவபெருமான் தான். பொதுவாக கால பைரவரை, யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என்றெல்லாம் அழைக்கலாம். இந்த கால பைரவரின் வாகனமாக நாய் திகழ்கிறது.
தாட்சாயினியை இழந்த சிவபெருமான் தனது மனைவியாகிய தாட்சாயினியை கையில் எடுத்துக்கொண்டு கோபமாக வந்த சமயத்தில் விஷ்ணு பகவானின் சக்கரத்தால் உயிரற்ற தாட்சாயனியின் உடல் பல துண்டுகளாக பாரத தேசம் எங்கும் விழுந்து சக்தி பீடங்களாக எ...