Uncategorized
” கோடையில் சுவையைக் கூட்டும் பைனாப்பிள் ரசம்..! ” – எப்படி செய்வது பார்க்கலாமா?
மனிதனின் ரசனைக்கு ஏற்ப வித விதமான ரசங்கள் நாம் வைத்து உணவோடு கலந்து சாப்பிட்டிருப்போம். குறிப்பாக தக்காளி ரசம், புளி ரசம். பூண்டு ரசம் மல்லி ரசம்.தூதுவளை ரசம் என விதவிதமாக சாப்பிட்ட நாம் வித்தியாசமாக இந்தக் கோடை காலத்தில் சுவையை அதிகளவு கொடுக்கும் பைனாப்பிள் ரசம் எப்படி வைப்பது என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பைனாப்பிள் ரசம் வைக்க தேவையான பொருட்கள்
1.தக்காளி இரண்டு
2.பைனாப்பிள் இரண்டு ஸ்லைஸ்
3.புளி சுண்டைக்காய் அளவு
4.உப்பு தேவையான அளவு
5.பருப்புத் தண்ணீர் இரண்டு கப்
6.பூண்டு ஐந்து பல்
7.கருவேப்பிலை
8.கொத்தமல்லி தேவையான அளவு
தாளிக்க
9.கடுகு
10.வரமிளகாய் 11.பெருங்காயம்
செய்முறை
முதலில் சுண்டைக்காய் அளவு புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதனை அடுத்து ஒரு கப் நீரில் பைனாப்பிள் மற்றும் தக்காளி பழத்தை லேசாக வேகவைத்து எடுத்து மசித்து...